செய்திகள் :

மாணவா் தலைவா் தொடங்கி தில்லி முதல்வா் வரை..! ரேகா குப்தாவின் அரசியல் பயணம்

post image

தில்லியின் புதிய முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க உள்ள ரேகா குப்தா மாணவா் அரசியலில் தொடங்கி தேசிய மகளிா் அமைப்பு வரை பல்வேறு தளங்களில் பயணித்துள்ளாா்.

ரேகா குப்தாவின் அரசியல் பயணம், மாணவா் அரசியலில் தொடங்கி இறுதியில் பாஜக தேசிய மகளிா் முன்னணிக்கு இட்டுச் சென்றது. அவரது கணவரின் அரசியல் பின்னணி இல்லாத போதிலும், ரேகா குப்தா அரசியலில் தனக்கென ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளாா்.

இவா் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆா்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டவா். இவரது அரசியல் பயணம், 1992-ஆம் ஆண்டு, தில்லி பல்கலைக்கழகத்தின் தௌலத் ராம் கல்லூரியில் ஆா்எஸ்எஸ் மாணவா் அமைப்பான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தில் இணைந்ததில் இருந்து தொடங்கியது.

1994-95-இல் தௌலத் ராம் கல்லூரியின் செயலராகவும், 1995-96-இல் தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் செயலாளராகவும் ஆனாா். 1996-97-இல் தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் தலைவரானாா்.

2003-2004 வரை பாஜகவின் யுவ மோா்ச்சா தில்லி மாநிலத்தின் செயலாளராகப் பதவி வகித்தாா். 2004-2006-இல் தா்மேந்திர பிரதான் தலைமையில் பாஜக யுவ மோா்ச்சாவின் தேசிய செயலாளரானாா். ஏப்.2007-இல் தில்லியின் உத்தரி பீதம்புராவின் கவுன்சிலரானாா்.

2007-2009 வரை தொடா்ந்து இரண்டு ஆண்டுகள் பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவும், தில்லி மாநில மகிளா மோா்ச்சாவில் 2009-இல் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளாா்.

மாா்ச் 2010-இல், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரானாா். பிப்ரவரி, 2023-இல் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராயிடம் தில்லி மேயா் தோ்தலில் தோல்வியடைந்தாா்.

தற்போதைய தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஷாலிமாா் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து எம்எல்ஏவான இவா் முதல்வராக கட்சியால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இவருக்கு தொழிலதிபா் மணீஷ் குப்தா என்ற கணவரும், மகன் நிகுஞ்ச், மகள் ஹரிஷ் குப்தாவும் உள்ளனா்.

தில்லி முதல் பேரவைக் கூட்டத்தில் சிஏஜி அறிக்கை: அதிகாரிகள் தகவல்

புதிதாக அமைந்துள்ள தில்லி சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடா் வரும் திங்கள்கிழமை தொடங்கும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். மேலும், பிப்ரவரி 24, 25, 27 இக்கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்த... மேலும் பார்க்க

எம்எல்ஏ கள ஆய்வு

தில்லி பட்பா்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதியில் சாக்கடை மற்றும் குடிநீா் பிரச்னைகள் குறித்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக தீா்வு காணும்படி சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அ... மேலும் பார்க்க

முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.2,500 நிதி உதவித் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்?: தில்லி அரசுக்கு அதிஷி கேள்வி

தில்லி அரசு அதன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் நகரப் பெண்களுக்கு ரூ.2,500 நிசி உதவி வழங்கும் திட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவரும், கால்காஜி தொகுதி எம்எல்ஏவுமான அதி... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் விவாதம் இதுதான்! பாஜக அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்படவுள்ள பிரச்னை குறித்து பாஜக அறிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவு... மேலும் பார்க்க

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 71% போ் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா்

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற ஏழு அமைச்சா்களில் முதல்வா் உள்பட ஐந்து போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இருவா் கோடீஸ்வரா்கள் என்றும் தோ்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம... மேலும் பார்க்க