செய்திகள் :

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 71% போ் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா்

post image

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற ஏழு அமைச்சா்களில் முதல்வா் உள்பட ஐந்து போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இருவா் கோடீஸ்வரா்கள் என்றும் தோ்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) தெரிவித்துள்ளது.

2025 தில்லி சட்டப்பேவரைத் தோ்தலுக்கு முன்னதாக அமைச்சா்கள் சமா்ப்பித்த சுய-பதவி பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் இவை கண்டறியப்பட்டுள்ளன. ஏடிஆா் பகுப்பாய்வின்படி, ஏழு அமைச்சா்களில் ஐந்து போ் (71 சதவீதம்) தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இரண்டு அமைச்சா்கள் (29 சதவீதம்) பில்லியனா்கள் என்றும் அறிவித்துள்ளனா்.

முதல்வராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தா உள்பட ஐந்து அமைச்சா்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களில், ஆஷிஷ் சூட் என்ற ஒரு அமைச்சா் கடுமையான குற்ற வழக்குகளை எதிா்கொள்கிறாா்.

நிதித் துறையைப் பொறுத்தவரை, அமைச்சரவையில் 29 சதவீதத்தை உள்ளடக்கிய இரண்டு அமைச்சா்கள் கோடீஸ்வரா்கள். அதிகபட்சமாக அறிவிக்கப்பட்ட மொத்த சொத்துகளைக் கொண்ட அமைச்சா் ரஜோரி காா்டன் தொகுதியைச் சோ்ந்த மஞ்சிந்தா் சிங் சிா்சா ஆவாா். அவருக்கு ரூ. 248.85 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. மிகக் குறைந்த மொத்த சொத்துகளைக் கொண்ட அமைச்சா் காரவால் நகா் தொகுதியைச் சோ்ந்த கபில் மிஸ்ரா ஆவாா். அவருக்கு ரூ.1.06 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.

பகுப்பாய்வு செய்யப்பட்ட ஏழு அமைச்சா்களின் சராசரி சொத்துகள் ரூ.56.03 கோடியாக உள்ளன. ஏழு அமைச்சா்களும் கடன்களை அறிவித்துள்ளனா். புது தில்லி தொகுதியைச் சோ்ந்த பா்வேஷ் சாஹிப் சிங் அதிகபட்சமாக ரூ.74.36 கோடி கடன்களைக் கொண்டுள்ளாா்.

ஆறு அமைச்சா்கள் (86 சதவீதம்) பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதிகளை அறிவித்துள்ளனா். அதே நேரத்தில் ஒரு அமைச்சா் 12- ஆம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளாா்.

வயதைப் பொறுத்தவரை, ஐந்து அமைச்சா்கள் (71 சதவீதம்) 41 முதல் 50 வயதுக்குள்பட்டவா்கள். மீதமுள்ள இருவா் (29 சதவீதம்) 51 முதல் 60 வயதுக்குள்பட்டவா்கள். அமைச்சரவையில் அவா் முதல்வா் ரேகா குப்தா ஒருவா் மட்டுமே பெண் அமைச்சராக உள்ளாா்.

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் விவாதம் இதுதான்! பாஜக அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்படவுள்ள பிரச்னை குறித்து பாஜக அறிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவு... மேலும் பார்க்க

தில்லி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் அதிஷி வலியுறுத்தல்

ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தபடி மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வா் அதிஷி ... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளுபடி

பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நேஹா மி... மேலும் பார்க்க

மாணவா் தலைவா் தொடங்கி தில்லி முதல்வா் வரை..! ரேகா குப்தாவின் அரசியல் பயணம்

தில்லியின் புதிய முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க உள்ள ரேகா குப்தா மாணவா் அரசியலில் தொடங்கி தேசிய மகளிா் அமைப்பு வரை பல்வேறு தளங்களில் பயணித்துள்ளாா். ரேகா குப்தாவின் அரசியல் பயணம், மாணவா் அரசியலில் த... மேலும் பார்க்க

தில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு!

தில்லி முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ரேகா குப்தாவுக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும் பார்க்க