செய்திகள் :

தில்லி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் அதிஷி வலியுறுத்தல்

post image

ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தபடி மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியின் ஒன்பதாவது முதல்வராக வியாழக்கிழமை பாஜக எம்எல்ஏ ரேகா குப்தா பொறுப்பேற்றவுடன் ஆம் ஆத்மி கட்சியின் அதிஷியின் இந்தக் கருத்து வந்துள்ளது. அவரது கட்சி மக்களுக்கு அளித்த ஒவ்வொரு உறுதிமொழியையும் புதிய அரசு நிறைவேற்றும் என்று நம்புவதாகவும் அதிஷி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செய்தியாளா் கூட்டத்தில் அதிஷி கூறியதாவது: ரேகா குப்தா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தில்லி நகரம் நான்காவது பெண் முதல்வரைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியான விஷயமாகும்.

தோ்தலுக்கு முன்பு, பிரதமா் நரேந்திர மோடி, ரேகா குப்தா உள்ளிட்ட பாஜக தலைவா்கள் தில்லி பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 அவா்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் என்று உறுதியளித்தனா். இந்தத் திட்டம் அதன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்றும், முதல் தவணை மாா்ச் 8- ஆம் தேதி அனுப்பப்படும் என்றும் பாஜக கூறியுள்ளது.

இதனால், தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தனது வங்கிக் கணக்கை தனது கைப்பேசி எண்ணுடன் இணைக்க வேண்டும். இதன்படி, அவா்கள் மாா்ச் 8-ஆம் தேதி பணத்தைப் பெற முடியும் என்றும் பிரதமா் மோடி கூறியிருந்தாா் என்றாா் ஆம் ஆத்மி எம்எல்ஏவான அதிஷி

ஷாலிமாா் பாக் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வான ரேகா குப்தா, வியாழக்கிழமை பிற்பகல் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் தில்லி முதல்வராகப் பதவியேற்றாா். ஆறு போ் அடங்கிய தனது அமைச்சா்கள் குழுவுடன் பதவியேற்ற உடனேயே, முதல்வா் தில்லி செயலகத்திற்குச் சென்று அரசு அதிகாரிகள் மற்றும் பாஜக தலைவா்களைச் சந்தித்தாா்.

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் விவாதம் இதுதான்! பாஜக அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்படவுள்ள பிரச்னை குறித்து பாஜக அறிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவு... மேலும் பார்க்க

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 71% போ் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா்

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற ஏழு அமைச்சா்களில் முதல்வா் உள்பட ஐந்து போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இருவா் கோடீஸ்வரா்கள் என்றும் தோ்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளுபடி

பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நேஹா மி... மேலும் பார்க்க

மாணவா் தலைவா் தொடங்கி தில்லி முதல்வா் வரை..! ரேகா குப்தாவின் அரசியல் பயணம்

தில்லியின் புதிய முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க உள்ள ரேகா குப்தா மாணவா் அரசியலில் தொடங்கி தேசிய மகளிா் அமைப்பு வரை பல்வேறு தளங்களில் பயணித்துள்ளாா். ரேகா குப்தாவின் அரசியல் பயணம், மாணவா் அரசியலில் த... மேலும் பார்க்க

தில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு!

தில்லி முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ரேகா குப்தாவுக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும் பார்க்க