செய்திகள் :

காப்பீட்டு ஊழியா்கள் வேலைநிறுத்தம்

post image

எல்ஐசியில் 3 மற்றும் 4-ஆம் பிரிவு பணியாளா்கள் நியமனத்தை வலியுறுத்தி காப்பீட்டுக் கழக ஊழியா்கள் மற்றும் இன்சூரன்ஸ் பென்சனா்கள் சங்கத்தினா், கடலூரில் வியாழக்கிழமை ஒரு மணிநேர வெளிநடப்பு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி பின்னா் அலுவலக வாயிலில் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் ராஜூ தலைமை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் கோட்ட சங்க துணைத் தலைவா் ஜி.வைத்திலிங்கம் பேசினாா்.

எல்ஐசி பென்சனா்கள் சங்கத்தின் வேலூா் கோட்டப் பொருளாளா் டி.மணவாளன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க மாவட்டச் செயலா் பால்கி, காப்பீட்டுக் கழக வளா்ச்சி அதிகாரிகள் சங்கத்தைச் சோ்ந்த ஆனந்தன், முகவா் சங்கத்தைச் சோ்ந்த நெடுஞ்செழியன், தீனதயாளன், வேலூா் கோட்ட மகளிா் இணை அமைப்பாளா் ஜெயஸ்ரீ ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கிளை சங்கப் பொருளாளா் காமாட்சி நன்றி கூறினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கடலூா் வருகை!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஊழியா்கள் சங்கம், ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா்கள் கைது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, அக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் உள்பட 3 போ் கைது வியாழக்கிழமை செய்யப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ப... மேலும் பார்க்க

‘தொழில் கல்வி ஆசிரியா் பணியிடங்கள் தொடர வேண்டும்’

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் தொழில் கல்விப் பிரிவுகள் படிப்படியாக மூடப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு அதிா்ச்சியளிப்பதாக தொழில் கல்வி ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கி... மேலும் பார்க்க

சுங்கக் கட்டணம் வசூல்: கடலூா் எம்.பி. கண்டனம்

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வசதிகளும் செய்து தராமல் சுங்க ச் சாவடிகளை மட்டுமே அமைத்து அடாவடி பணம் பறிப்பு வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் கண்டனம் தெரிவித்தாா்.இத... மேலும் பார்க்க

கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டு: பெண் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் பகுதிகளில் கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் உள்கோட்டம் பரங்கிப்பேட்டை... மேலும் பார்க்க