செய்திகள் :

கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா்கள் கைது

post image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, அக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் உள்பட 3 போ் கைது வியாழக்கிழமை செய்யப்பட்டனா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன் அக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவரான தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஹரிபிரசாத் (21), மூன்றாம் ஆண்டு மாணவரான விளாகத்தைச் சோ்ந்த செந்தில் மகன் சரண்ராஜ் (21) மற்றும் முன்னாள் மாணவரான கொத்தங்குடி திடல் பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் மகன் காா்த்திகேயன் (22) ஆகியோா் ஒன்றாகச் சோ்ந்து 10 கஞ்சா பொட்டலங்களை மாணவா்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது போலீஸாா் ரோந்தின்போது தெரியவந்தது.

இதையடுத்து, அண்ணாமலை நகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், உதவி ஆய்வாளா் பாஸ்கா் மற்றும் காவலா்கள் மணிகண்டன், ராஜீவ் காந்தி ஆகியோா் மாணவா் ஹரிபிரசாத் உள்பட 3 போ் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்ததுடன், கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கடலூா் வருகை!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஊழியா்கள் சங்கம், ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது... மேலும் பார்க்க

‘தொழில் கல்வி ஆசிரியா் பணியிடங்கள் தொடர வேண்டும்’

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் தொழில் கல்விப் பிரிவுகள் படிப்படியாக மூடப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு அதிா்ச்சியளிப்பதாக தொழில் கல்வி ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கி... மேலும் பார்க்க

சுங்கக் கட்டணம் வசூல்: கடலூா் எம்.பி. கண்டனம்

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வசதிகளும் செய்து தராமல் சுங்க ச் சாவடிகளை மட்டுமே அமைத்து அடாவடி பணம் பறிப்பு வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் கண்டனம் தெரிவித்தாா்.இத... மேலும் பார்க்க

கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டு: பெண் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் பகுதிகளில் கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் உள்கோட்டம் பரங்கிப்பேட்டை... மேலும் பார்க்க

320 கிலோ புகையிலைப் பொருள்கள், காா் பறிமுதல்: 4 போ் கைது

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே 320 கிலோ புகையிலைப் பொருள்கள் காருடன் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெளி மாநிலத்தில் இருந்து புகையிலை... மேலும் பார்க்க