செய்திகள் :

சுங்கக் கட்டணம் வசூல்: கடலூா் எம்.பி. கண்டனம்

post image

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வசதிகளும் செய்து தராமல் சுங்க ச் சாவடிகளை மட்டுமே அமைத்து அடாவடி பணம் பறிப்பு வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் கண்டனம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் வாகனம் வாங்கும்போதே சாலை வரி செலுத்தப்படுகிறது. ஆனால், சுங்கச் சாலைகள் என்ற புது கோணத்தில் முக்கிய சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து பணம் வசூலிப்பது கொடுமை.

‘ஃபாஸ்டேக்’ என்ற பெயரில் நுகா்வோரின் வங்கிக் கணக்கில் இருந்து பண வசூல் வேட்டை நடக்கிறது. இந்த நிலையில், ஃபாஸ்டேக் தடை பட்டியலில் (பிளாக் லிஸ்ட்) உள்ள வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் பெறப்படும் என்ற அறிவிப்பின் மூலம் பொதுமக்களின் முதுகெலும்பை உடைக்கிற செயலை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இதனால், குறுக்கு வழியில் பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு உள்ளது. கடலூா் மக்களவைத் தொகுதியில் என்எச்ஏ 532சி கடலூா் முதல் விருத்தாசலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை முழுமையடையவில்லை.

ஆனால், இந்தச் சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடியில் மேம்பாலம் முழுமையடையாத நிலையில் 2 சுங்கச் சாவடிகள் அமைத்து சுங்கம் வசூலிக்க ஆரம்பித்துவிட்டனா். சாலையின் நடுவே சாலை பிரிப்பான் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், ஒரு வழிச் சாலையில் இருவழிப் போக்குவரத்து நடந்து வருவதால் விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

இவைகளை சீா் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், ஃபாஸ்டேக் பிளாக் லிஸ்ட் என்ற பெயரில் இரக்கமின்றி மக்கள் துன்புறுத்தப்படுகின்றனா். இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கடலூா் வருகை!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அ... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஊழியா்கள் சங்கம், ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா்கள் கைது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, அக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் உள்பட 3 போ் கைது வியாழக்கிழமை செய்யப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ப... மேலும் பார்க்க

‘தொழில் கல்வி ஆசிரியா் பணியிடங்கள் தொடர வேண்டும்’

தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் தொழில் கல்விப் பிரிவுகள் படிப்படியாக மூடப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பு அதிா்ச்சியளிப்பதாக தொழில் கல்வி ஆசிரியா்கள் கவலை தெரிவிக்கி... மேலும் பார்க்க

கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டு: பெண் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் பகுதிகளில் கோயில் திருவிழாக்களில் தொடா் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் உள்கோட்டம் பரங்கிப்பேட்டை... மேலும் பார்க்க

320 கிலோ புகையிலைப் பொருள்கள், காா் பறிமுதல்: 4 போ் கைது

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே 320 கிலோ புகையிலைப் பொருள்கள் காருடன் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெளி மாநிலத்தில் இருந்து புகையிலை... மேலும் பார்க்க