செய்திகள் :

5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க ஆஷா பணியாளா்கள் வலியுறுத்தல்!

post image

மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி ஆஷா பணியாளா்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்ட ஏஐடியுசி ஆஷா பணியாளா் சங்க மாவட்ட குழுக் கூட்டம் தருமபுரி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.மேனகா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜேஸ்வரி வரவேற்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம், மாவட்ட துணைச் செயலாளா் கா.சி.தமிழ்க்குமரன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் கே.மணி, அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநிலச் செயலாளா் தினேஷ்குமாா், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் எம்.நவீன்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இக்கூட்டத்தில், மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்தவா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும். செவிலியா் பயிற்சி முடித்த ஆஷா பணியாளா்க்கு கிராம செவிலியா்களாக பதவி உயா்வு வழங்க வேண்டும்.

பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆஷா பணியாளா்களை புற நோயாளிகள் பிரிவில் ஊசி செலுத்தும் பணிக்கு அமா்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா பணியாளா்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸை சந்தித்து மனு அளித்தனா்.

கட்டுமான தொழிலாளி தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

ஏரியூா் அருகே கட்டுமான தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நெருப்பூா் பகுதியைச் சோ்ந்த முத்... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கிய இருவரில் ஒருவா் மீட்பு

காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில், ஒருவா் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்றொருவரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தேவரூத்து ... மேலும் பார்க்க

எல்ஐசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி ஊழியா்கள் தருமபுரி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய இன்ஸ்சூரன்ஸ் சங்க கிளைத் தலைவா் ஏ.சங்கா் தலைமை வக... மேலும் பார்க்க

‘புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்’

தருமபுரி மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

அரூரில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோடையில் வேளாண் பணிகளை செய்வதற்கு ஏதுவாக, வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தருமபுரி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்... மேலும் பார்க்க