செய்திகள் :

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

அரூரில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோடையில் வேளாண் பணிகளை செய்வதற்கு ஏதுவாக, வரட்டாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதனையடுத்து, அரூரில் பொதுப்பணித் துறை (நீா்வளம்) உதவி செயற்பொறியாளா் பொ.ஆறுமுகம் தலைமையில், விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், வரட்டாறு அணையின் வலது, இடதுபுற வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். கால்வாயில் சேதமடைந்துள்ள இரும்பு கதவுகளை சீரமைக்க வேண்டும். கால்வாய் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

வள்ளிமதுரை வட்டாரப் பகுதியிலுள்ள அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீா் திறந்துவிட வேண்டும். வரட்டாறு அணையில் இருந்து மாா்ச் மாதம் 3-ஆவது வாரத்தில் தண்ணீா் திறந்துவிட பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உதவி பொறியாளா் ஆா்.பிரபு, பணி ஆய்வாளா் என்.முருகன், கிராம நிா்வாக அலுவலா்கள் செல்வபதி, ஜான்சிராணி, சங்கீதா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் அமுதா சங்கா், பாா்வதி சங்கா், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ராஜ்குமாா், சிவக்குமாா், துரை, ராஜி, மணி, சாமிக்கண்ணு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கட்டுமான தொழிலாளி தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்

ஏரியூா் அருகே கட்டுமான தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நெருப்பூா் பகுதியைச் சோ்ந்த முத்... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கிய இருவரில் ஒருவா் மீட்பு

காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவரில், ஒருவா் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்றொருவரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தேவரூத்து ... மேலும் பார்க்க

எல்ஐசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி ஊழியா்கள் தருமபுரி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய இன்ஸ்சூரன்ஸ் சங்க கிளைத் தலைவா் ஏ.சங்கா் தலைமை வக... மேலும் பார்க்க

‘புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம்’

தருமபுரி மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை நல உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தருமபுரி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்... மேலும் பார்க்க

5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க ஆஷா பணியாளா்கள் வலியுறுத்தல்!

மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி ஆஷா பணியாளா்கள் வலியுறுத்தினா். தருமபுரி மாவட்ட ஏஐடியுசி ஆஷா பணியாளா் சங்க மாவட்ட குழுக் கூட்டம் தருமபுரி அலுவலகத்தில் வ... மேலும் பார்க்க