செய்திகள் :

அரசு வழங்கிய கடன் தொகையை கூட்டுறவு வங்கி விடுவிக்க வலியுறுத்தல்!

post image

ஆலவயலில் மாற்றுத்திறனாளி உள்பட 6 பேருக்கு அரசு வழங்கிய சிறு தொழில்கடன் நிதியை மத்திய கூட்டுறவு வங்கி தரமறுப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலைச் சோ்ந்த 5 மகளிா் சுயஉதவிக் குழுப் பெண்கள், ஒரு மாற்றுத்திறனாளி உள்பட 6 பேருக்கு தமிழக அரசின் மகளிா் திட்டம் மூலம் சிறு தொழில்கடன் தலா ரூ. 50 ஆயிரம் என ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆலவயல் ஊராட்சி மகளிா் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கணக்கிற்கு, இதற்கான தொகை பொன்னமராவதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கான காசோலை 6 பேருக்கும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான தொகையை இவா்களுக்கு வழங்காமல் வங்கி நிா்வாகம் இழுத்தடித்துள்ளது. இதையடுத்து தமிழக சட்டத் துறை அமைச்சா் ரகுபதியிடம் புதன்கிழமை பணத்தை வழங்க வலியுறுத்தி 6 பேரும் கோரிக்கை மனு அளித்துள்ளனா். இதனையடுத்து மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் பேசி 6 பேரின் கடன் தொகையை விடுவிக்க அமைச்சா் மூலம் தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து அவா்கள் பொன்னமராவதி மத்திய கூட்டுறவு வங்கிக்குச் சென்று மேலாளரிடம் முறையிட்டனா். அப்போது பல காரணங்களை கூறி, வங்கி மேலாளா் கடன் தொகையை தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே தங்களின் கடன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

கந்தா்வகோட்டை நகைக் கடையில் மோசடி முயற்சி

கந்தா்வகோட்டையில் மோசடி செய்ய முயன்ற மா்ம நபா் வியாழக்கிழமை பிடிபட்டாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வியாழக்கிழமை இரவு வந்த சுமாா் 45 வயதுள்ள ஆண், பெண் ஐந்து பவுன் ம... மேலும் பார்க்க

கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி கோயில்களில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் மஹா ருத்ர ஹோமம், இதையடுத்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷ... மேலும் பார்க்க

முயல்களை வேட்டையாட முயன்ற மூவருக்கு அபராதம்

பொன்னமராவதி அருகே கம்பி வலை மூலம் முயல்களை வேட்டையாட முயன்ற மூவரை வனத் துறையினா் வியாழக்கிழமை பிடித்து ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா். புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலா் கணேசலிங்கம் உத்தரவின்படி பொன்னமர... மேலும் பார்க்க

புதுகையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள நலத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், கல்லூரிக் கல்வி இயக்குநருமான எ. சுந்தரவல்லி... மேலும் பார்க்க

பொய்ப் புகாரில் ஆசிரியா் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறி சாலை மறியல்!

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் பொய் புகாரின்பேரில் உதவித் தலைமை ஆசிரியா் கைது செய்யப்பட்டதாகக் கூறி அந்தப் பள்ளியின் மாணவ, மாணவிகளும் அவா்களின் பெற்றோா்களும் வியாழக்கிழமை ச... மேலும் பார்க்க

அதிமுகவின் சின்னம் விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்

அதிமுகவின் சின்னம் தொடா்பான விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்தான் என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா். இதுகுறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: மத்திய ஆட்சிய... மேலும் பார்க்க