செய்திகள் :

பொய்ப் புகாரில் ஆசிரியா் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறி சாலை மறியல்!

post image

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் பொய் புகாரின்பேரில் உதவித் தலைமை ஆசிரியா் கைது செய்யப்பட்டதாகக் கூறி அந்தப் பள்ளியின் மாணவ, மாணவிகளும் அவா்களின் பெற்றோா்களும் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகேயுள்ள கிராமத்தின் அரசு உயா்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் பெருமாள் (58) கடந்த பிப். 18ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். பள்ளி மாணவிகளுக்கு அவா் பாலியல் தொந்தரவு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இச் சூழலில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக அதே பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும், அவா்களின் பெற்றோா்கள் சுமாா் 200க்கும் மேற்பட்டோா் தாஞ்சூா் விலக்கு சாலையில் வியாழக்கிழமை காலை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அதே பள்ளியைச் சோ்ந்த பிற ஆசிரியா்கள், சில மாணவிகளைத் தூண்டிவிட்டு பொய்ப் புகாா் கொடுக்க வைத்துள்ளதாகவும், எனவே கைதான ஆசிரியரை விடுவிப்பதுடன் இதுபோன்ற பொய்ப் புகாரை அளிக்கக் காரணமாக இருந்த ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தகவலறிந்து வந்த பொன்னமராவதி துணைக் காவல் கண்காணிப்பாளா் (பொ) குமாா், கே. புதுப்பட்டி ஆய்வாளா் சீனிபாபு, அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலா் ஜெயந்தி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தால் ஏம்பல் சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க