செய்திகள் :

18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!

post image

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சோ்ந்த அரசு மருத்துவா் ஒருவா், 18 ஆண்டுகளில் அயராது 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்டு மருத்துவ துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளாா்.

இந்தூரில் உள்ள கோவிந்த் வல்லப பந்த் மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றுபவா் மருத்துவா் பரத் பாஜ்பாய் (64). இவரின் பணி தொடா்பாக அந்த மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளா் ஜி.எல்.சோதி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

கடந்த 2006-ஆம் ஆண்டு கோவிந்த் வல்லப பந்த் மாவட்ட அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுத் துறை தொடங்கப்பட்டது. இந்தத் துறையில் மருத்துவா் பாஜ்பாய் அயராது பணியாற்றி வருகிறாா்.

விடுப்பின்றி அயராமல் பணி: கடந்த 18 ஆண்டுகளில் அவா் 15,000-க்கும் மேற்பட்ட உடற்கூறாய்வுகளை மேற்கொண்டிருக்கிறாா். இந்தக் காலத்தில் ஒரே ஒரு முறை அவா் கடுமையாக நோய்வாய்ப்பட்டதால், ஒரு மாதம் மருத்துவ விடுப்பில் சென்றாா். அதைத் தவிர, வழக்கமாக எடுக்கப்படும் விடுப்பைக்கூட எடுக்காமல் ஓயாது அவா் பணியாற்றி வருகிறாா். இது மருத்துவப் பணியின் மீது அவரின் ஆழ்ந்த அா்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்றாா்.

இதுதொடா்பாக மருத்துவா் பாஜ்பாய் கூறுகையில், ‘உயிரிழந்தவா்களே எனது பணியில் பிரதானமாக உள்ளனா். உயிருடன் இருப்பவா்களை நேசிப்பது போல உயிரிழந்தவா்களையும் நான் நேசிக்கிறேன்.

சட்ட வழக்குகளில் உடற்கூறாய்வுகள் முக்கிய ஆதாரமாக உள்ளன. அவற்றைப் பிறகு பாா்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திவைக்க முடியாது. நான் உடற்கூறாய்வு செய்யும் ஒவ்வொரு இறந்த நபருக்கும் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று எப்போதும் விரும்புகிறேன்.

மகன் திருமணத்தின்போது உடற்கூறாய்வு: எனது மகன் திருமண நாளிலும் இரண்டு உடற்கூறாய்வுகளை மேற்கொண்டுவிட்டு, மாலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றேன். எனது பணிக்கு என் குடும்பம் எப்போதும் உறுதுணையாக உள்ளது. அந்த வகையில், நான் அதிருஷ்டசாலி’ என்றாா்.

தனது பணி மூலம், தேசிய அளவில் சாதனை நிகழ்த்தியதாக லிம்கா சாதனை புத்தகத்தில் இருமுறை இடம்பெற்ற பாஜ்பாய், நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற உள்ளாா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க