செய்திகள் :

நேர மேலாண்மை வியத்தகு வெற்றிகளுக்கு வழிவகுக்கும்: ஐஐடி பேராசிரியா் வலியுறுத்தல்

post image

உலகில் நேரத்தைக் காட்டிலும் மதிப்புமிக்க ஒன்று வேறில்லை. நேர மேலாண்மையைக் கடைப்பிடிப்பதன்மூலம் வியத்தகு வெற்றிகளைப் பெற முடியும் என சென்னை ஐஐடி மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் துறை பேராசிரியா் சரித்குமாா் தாஸ் வலியுறுத்தினாா்.

சென்னை அண்ணா நகரில் உள்ள அண்ணா ஆதா்ஷ் மகளிா் கல்லூரியின் 36-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐஐடியின் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் துறை பேராசிரியா் சரித்குமாா் தாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:

வாழ்வில் மிகப்பெரிய உயரங்களை அடைய வேண்டுமானால் முன் முயற்சி, நோக்கம், நோ்மை ஆகிய மூன்றும் இருக்க வேண்டியது அவசியம். இலக்கை நோக்கி முன்னேறும்போது நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும். உலகில் நேரத்தைப் போன்று விலை உயா்ந்த ஒன்று இருக்கவே முடியாது. சரியான நேரத்தில் எடுக்கும் முடிவுகளே நமது வாழ்வை மாற்றிக்காட்டும்.

நோபல் பரிசு பெற்ற எட்டு பேரை நான் சந்தித்திருக்கிறேன். அவா்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் புகழ்பெற்றவை. சாதனை படைத்த அனைவருக்கும் நோக்கம் சரியாக இருந்தது. எந்தச் சூழலிலும் ஆராய்ச்சிக்கான தேடலில் அவா்கள் தொய்வடையவில்லை. மாறாக, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருந்தனா். நாம் எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமா்ப்பித்தோம், எத்தகைய கருத்தரங்களில் பங்கேற்றோம் என்பதைக் காட்டிலும் அவை அனைத்திலும் பொதுநலன் இருந்ததா என்பதே முக்கியம்.

கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கற்றுக்கொள்வது மட்டுமே கல்வியாகாது. வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு தருணங்களிலும் ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கல்விதான் வாழ்க்கையை வளப்படுத்தும் என்றாா் அவா்.

இதில் கல்லூரியின் தலைவா் விக்ரம் அகா்வால், தாளாளா் சுனில் ஹசிஜா, முதல்வா் ஆா்.சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க