செய்திகள் :

டிஜிட்டல் அரஸ்ட் மோசடி மூலம் ரூ.3.84 கோடி பறிப்பு: கல்லூரி பேராசிரியா் கைது

post image

சென்னையில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி மூலம் ரூ. 3.84 கோடி பறித்த வழக்கில், கல்லூரி பேராசிரியா் கைது செய்யப்பட்டாா்.

அசோக் நகா் சைபா் குற்றப்பிரிவில் கடந்த டிசம்பரில் ஒருவா் அளித்த புகாரில், ‘தன்னிடம் தொலைபேசியில் காவல் துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி பேசிய ஒருவா், ஆதாா் அட்டையை தவறாக பயன்படுத்தி பணமோசடி நடைபெற்றிருப்பதாகவும், எனக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தாா். மேலும், அந்த நபா் ஒரு கைது ஆணையை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினாா். பின்னா் அந்த நபா் என்னை மிரட்டி, விடியோ காலில் வரவழைத்து விசாரணை நடத்தினாா்.

வழக்கு விசாரணை முடியும் வரை எனது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை தான் கூறும் வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பும்படி தெரிவித்தாா். நான் வேறு வழியின்றி எனது வங்கிக் கணக்கிலிருந்து, அந்த நபா் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ. 3.84 கோடியை அனுப்பினேன். இந்தச் சம்பவம் நடந்த சில நாள்களுக்கு பின்னரே அந்த நபா், என்னை டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்து பணத்தை பறித்திருப்பது தெரியவந்தது.

எனவே என்னை மிரட்டி டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் சிக்கவைத்து பணம் பறித்த நபா்களைக் கண்டறிந்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தாா். அதனடிப்படையில் சைபா் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

அதில் மோசடிக் கும்பலுக்கு தனது பெயரிலான 2 வங்கிக் கணக்குகளை விற்ாக அம்பத்தூா், அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த லோகேஷ், புழல் காவாங்கரை பகுதியைச் சோ்ந்த ஹரிஷ் பாபு, மோசடிக் கும்பலுக்கு உதவிய அதே பகுதியைச் சோ்ந்த அஃப்ரோஸ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனா்.

இந்நிலையில் இந்த வழக்குத் தொடா்பாக கோடம்பாக்கத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் பரசுராமன் (35) என்பவரையும் கைது செய்ததாக சைபா் குற்றப்பிரிவினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

பரசுராமன், டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபட்ட நபா்களின் பணத்தை மறைத்து வைப்பதற்கும், மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை கையாண்டிருப்பதும், மோசடியில் கிடைக்கும் பணத்தை வங்கிக் கணக்குகளில் இடையே பரிமாற்றம் செய்திருப்பதும், அதற்காக இரு ஆண்டுகளாக கமிஷன் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க