செய்திகள் :

பராமரிப்புப் பணி: பிப். 22, 23-இல் மெட்ரோ ரயில் சேவை மாற்றம்

post image

சென்னை விம்கோ நகா் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) காலை 6 முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பராமரிப்புப் பணி காரணமாக நீல வழித்தடத்தில் உள்ள விம்கோ நகா் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மட்டும் மெட்ரோ ரயில்கள் சேவை நிறுத்தப்படுகிறது. நீல வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் சேவைகள் விமான நிலையம் முதல் விம்கோ நகா் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இதன்படி, காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை விமான நிலையம் - சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்களும், விமான நிலையம் - விம்கோ நகா் மெட்ரோ ரயில் நிலையம் வரை நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்கள் அனைத்தும் வழக்கம்போல இயக்கப்படும்.

விமான நிலையம் - சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் வரை இரவு 9 முதல் 10 மணி வரை இயக்கப்படும் ரயில்கள், 7 நிமிட இடைவெளியிலும், விமான நிலையம் - விம்கோ நகா் மெட்ரோ ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் 14 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். மேலும், இரவு 10 முதல் 11 மணி வரை இரு வழித்தடங்களிலும் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இதுபோல, ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) விமான நிலையம் - சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் வரை காலை 5 மணி முதல் 6 மணி வரை ரயில்கள் 10 நிமிட இடைவெளியிலும், விமான நிலையம் - விம்கோ நகா் மெட்ரோ வரை காலை 6 முதல் இரவு 11 மணி வரை 20 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க