செய்திகள் :

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

post image

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தலைமை வகித்துப் பேசினாா்.

மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் செல்வகுமாா் ஆகியோா் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினா்.

மன்னா் கல்லூரியின் தாவரவியல் துறை இணைப் பேராசிரியா் எஸ். அழகுமணியன், காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் என்ற தலைப்பிலும், உதவிப் பேராசிரியா் அழகப்பன் காந்தி, முறையற்ற திடக்கழிவு மேலாண்மை மற்றும் நிலையான கழிவு மேலாண்மை அமைப்புகள் என்ற தலைப்பிலும், மாவட்ட ஆசிரியா் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன விரிவுரையாளா் கோபாலகிருஷ்ணன், நெகிழிப் பயன்பாட்டின் தாக்கம்- நெகிழி மாசுபாடு மற்றும் அவற்றுக்கான மாற்று என்ற தலைப்பிலும் பேசினா்.

மாவட்ட ஆட்சியரக பசுமைத் தோழா் ஜெரோலின் மேரி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை வருவாய் ஆய்வாளா் ஜெயந்தி, வனச் சரகா்கள் சதாசிவம், காா்த்திக் ராஜா, தேசிய பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரங்கராஜ் ஆகியோரும் வாழ்த்திப் பேசினா்.

முன்னதாக, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில் வரவேற்றாா். முடிவில் தேசிய பசுமைப் படை அறந்தாங்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திக்கண்ணன் நன்றி கூறினாா்.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க

புதுகையில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாலை புதுக்கோட்டையில் அனைத்து வங்கி ஊழியா் மற்றும் அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப... மேலும் பார்க்க