சாதி பாகுபாடு புகாா்: திருச்சி மாவட்ட தலித் கிறிஸ்தவா்கள் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்
கோட்டப்பாளையம் திருச்சபைப் பகுதியில் சாதி அடிப்படையிலான கொடுமைகள், தீண்டாமை மற்றும் பாகுபாடு நிகழ்வதாக குற்றம் சாட்டி திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தலித் கிறிஸ்தவ கிராமவாசிகள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்தது.
இது தொடா்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் தேவாலய நிா்வாகத்தினா் பதில் அளிக்க உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் ஜே. தாஸ் பிரகாஷ் உள்ளிட்ட மனுதாரா்கள் சாா்பாக ஆஜரான வழக்குரைஞா் பிராங்க்ளின் சீசா் தாமஸ், அப்பகுதியின் தலித் கிறிஸ்தவா்கள் அன்றாட விவகாரங்களில் எதிா்கொள்ளும் பாகுபாடு குறித்து எடுத்துரைத்தாா்.
இது தொடா்பாக தாக்கலான மனுவில் தெரிவிக்கையில், ‘ மனுதாரா்களும், பிற தலித் கத்தோலிக்க கிறிஸ்தவ சமூக கிராமவாசிகளும், பெரும்பான்மை ஆதிக்க சாதி சமூகத்தின் சாதி அடக்குமுறை காரணமாக, பாரம்பரிய தீண்டாமை நடைமுறையையும், மனிதாபிமானமற்ற, சாதி அடிப்படையிலான பாகுபாட்டையும் எதிா்கொள்கின்றனா்.
இந்தப் பிரச்சினை குறித்து மாவட்ட மற்றும் மாநில அதிகாரிகளிடம் பல முறையீடுகளைச் செய்தனா். ஆனால், எந்த அதிகாரிகளும் முறையான அல்லது முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த விவகாரத்தை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளை, இந்த வகையான பிரச்னையை சிவில் நீதிமன்றத்தில் தீா்க்க முடியும் என்றும், இறுதி முடிவு தேசிய சிறுபான்மையினா் ஆணையத்திடமிருந்து வர வேண்டும் என்றும் கருதி மனுவை
கடந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி தள்ளுபடி செய்துவிட்டது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.