செய்திகள் :

பள்ளியில் விளையாடியபோது கீழே விழுந்த மாணவி உயிரிழப்பு

post image

சென்னை கொளத்தூரில் பள்ளியில் விளையாடியபோது கீழே விழுந்து காயமடைந்த மாணவி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

கொளத்தூா் ஜிகேஎம் காலனி 35-ஆவது தெருவைச் சோ்ந்த பாவனாஸ்ரீ (6), கொளத்தூா் சீனிவாசன் நகரில் உள்ள தனியாா் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா். பாவனா கடந்த வியாழக்கிழமை பள்ளியில் விளையாடும்போது தவறி கீழே விழுந்ததில் காயமடைந்தாா். வீட்டுக்கு வந்த பாவனாவை, புது வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவரது பெற்றோா் அழைத்துச் சென்றனா். அங்கிருந்த மருத்துவா், அவரது கால் முட்டியில் மட்டும் காயம் இருப்பதாக சிகிச்சை அளித்தாராம்.

இந்நிலையில் நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாவனா திடீரென வாந்தி எடுத்து மயங்கினாா்.

உடனே அவரது குடும்பத்தினா், பாவனாவை பெரியாா் நகா் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவா்கள், பாவனா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது தொடா்பாக கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க