செய்திகள் :

அதிமுகவின் சின்னம் விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்

post image

அதிமுகவின் சின்னம் தொடா்பான விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்தான் என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:

மத்திய ஆட்சியாளா்களுடன் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி மறைமுகக் கூட்டணி வைத்துள்ளாா். அதனால்தான் அவா் மத்திய அரசை நேரடியாக விமா்சிப்பதில்லை.

அதிமுகவின் சின்னம் குறித்த விவகாரமானது, மத்திய அரசின் திருவிளையாடல்தான்.

தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியின் மீது பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால்தான் அவா்கள் பாதிக்கப்படும்போது காவல் நிலையங்களில் அச்சமின்றிப் புகாா் அளிக்கின்றனா்.

அதன்படி அரிமளம் அருகே அரசு உயா் நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியா் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்திலும் மாணவிகளின் புகாா் வந்தவுடேனே சமூக நலத் துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினா். உடனடியாக அவா் கைது செய்யப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

யாா் மனதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. எனவே, குற்றம் நடப்பதற்கு முன் அதைத் தடுக்க எதையும் செய்ய முடியாது. அதன்பிறகு, புகாரின்பேரில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அமைச்சா் செந்தில் பாலாஜி குறித்த வழக்கில் தமிழக அரசின் கருத்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். அதைப் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.

ஜப்பான், சீனா போன்ற நாடுகள் ஒரேயொரு மொழியை வைத்து வளா்ந்துள்ளன. எனவே தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே போதும். மும்மொழிக் கொள்கை தேவையில்லை.

ஆனால், ஹிந்தியை மத்திய அரசு திணித்துக் கொண்டு இருக்கிறது. பாஜகவுக்கு கூட்டணிக்கு யாரும் கிடைக்கவில்லை. அதனால் கூட்டணியால்தான் திமுக வெற்றி பெறுகிறது என்று அண்ணாமலை கூறி வருகிறாா். எங்களின் கூட்டணி பலமானது. எனவே வரும் பேரவைத் தோ்தலில் 200 இடங்களில் வெல்வோம் என்றாா் அமைச்சா்.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க