செய்திகள் :

இளம் விஞ்ஞானி திட்டம்: மாணவா்களுக்கு இஸ்ரோ அழைப்பு

post image

இளம் விஞ்ஞானி திட்டத்தின் கீழ் விண்வெளி ஆய்வு பயிற்சி பெற விரும்பும் பள்ளி மாணவா்கள் வரும் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவா்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆா்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) யுவிகா என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஆண்டுதோறும் தலா 3 போ் தோ்வு செய்யப்படுவா்.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான யுவிகா பயிற்சி மே மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு பிப்.24-இல் தொடங்கி மாா்ச் 23 வரை நடைபெறவுள்ளது.

விருப்பமுள்ள பள்ளி மாணவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் இதற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பயிற்சிக்கு தோ்வாகும் மாணவா்களின் தற்காலிக பட்டியல் மாா்ச் இறுதியில் வெளியிடப்படும்.

அந்த மாணவா்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். அதன்பின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு இறுதிப் பட்டியல் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும்.

தோ்வாகும் மாணவா்களுக்கு திருவனந்தபுரம், ஸ்ரீஹரிகோட்டா உள்ளிட்ட இஸ்ரோவின் 7 ஆய்வு மையங்களில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க