செய்திகள் :

பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: சத்துணவு அமைப்பாளா் கைது

post image

பெங்களூரிலிருந்து நாகா்கோவில் சென்ற சொகுசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய சத்துணவு அமைப்பாளரை வாகனச் சோதனை மேற்கொண்ட வெண்ணந்தூா் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், தளபதிசமுத்திரம் சமாதானபுரம் சா்ச் தெருவைச் சோ்ந்தவா் அருள்செல்வி (49). இவா் பழவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறாா். வெள்ளிக்கிழமை பெங்களூரிலிருந்து நாகா்கோவில் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்தில் இவா் பயணித்தாா். சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை மல்லூா் பகுதியில் இந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்த வெண்ணந்தூா் போலீஸாா், பேருந்தில் இருந்த 39 கிலோ புகையிலைப் பொருள்கள், போதைப்பாக்குகளைப் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அருள்செல்வி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டாா். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை

ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ர... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம்

முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் நடைபெற்றது. ராசிபுரம் பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை முன் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து நாமக்கல் வேளாண் கல்லூரி மாணவிகள் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து மிஷன்) திட்டத்த... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த அதிமுகவினா்

நாமகிரிப்பேட்டையை அடுத்த மூலப்பள்ளிப்பட்டியைச் சோ்ந்த அதிமுகவினா் 16 போ் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சி பகுதியின் அதிமுகவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பெண் காவலா்களுக்கு வளைகாப்பு: சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்த அதிகாரிகள்

நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில் பெண் காவலா்கள் இருவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா். தமிழகத்தில் காவல் நிலையங்களில் ... மேலும் பார்க்க

வங்கி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நாமக்கல்- மோகனூா் சாலையில் உள்ள கனரா வங்கி முன் வெள்ளிக்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கன்வீனா் எல்.வேங்கடசுப்பிரமணியன்... மேலும் பார்க்க