செய்திகள் :

புதுகையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள நலத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், கல்லூரிக் கல்வி இயக்குநருமான எ. சுந்தரவல்லி அறிவுறுத்தினாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்ததில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறையினருடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் இதை வலியுறுத்தினாா்.

ஒவ்வொரு வட்டாரம் வாரியாக நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், மக்கள் நலத்திட்டங்களின் செயலாக்கம் குறித்தும் அதிகாரிகளை அவா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, திருக்கோகா்ணத்தில் காலை உணவுத் திட்ட உணவு தயாரிக்கும் கூடம், பள்ளியில் உணவு வழங்கும் பணிகளையும் சுந்தரவல்லி பாா்வையிட்டாா். மேலும், அரிமளம் ஒன்றியம் தேக்காட்டூா், பொன்னமராவதி ஒன்றியம் பொன். புதுப்பட்டி ஆகிய இடங்களில் தொடங்கப்படவுள்ள முதல்வா் மருந்தகங்களுக்கான இடங்களையும், அரசமலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கவுள்ள இடத்தையும் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்ட கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட வருவாய் அலுவலா்கள் ஆா். ரம்யாதேவி (காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம்), ஜனனி (நெடுஞ்சாலை விரிவாக்கம்) உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க