USAID அமைப்போடு நீண்ட கால தொடர்பு; பொய் சொல்கிறதா பாஜக? - Fact Checkers சொல்வதென...
பாஜகவினா் சாலை மறியல்!
புதுக்கோட்டையில் பாஜகவினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே அரசு உயா்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் பெருமாள் (58), மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, அவரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் பணியிடை நீக்கம் செய்தாா்.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் பாஜகவின் மேற்கு மாவட்டத் தலைவா் ராமச்சந்திரன் தலைமையில் ஆட்சியரகம் அருகே அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனா்.
இப்போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி அளிக்காத நிலையில், பால்பண்ணை பகுதியில் இருந்து ஆட்சியரகம் நோக்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை, ரவுண்டானா பகுதியில் போலீஸாா் தடுப்புகளை அமைத்து தடுத்தனா்.
இதனால், அனைவரும் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். கோரிக்கைளை வலியுறுத்தியும், போராட அனுமதி மறுத்த காவல் துறையினரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா். இதனால், போலீஸாருக்கும், பாஜகவினருக்குமிடயே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் புதுகை- திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.