செய்திகள் :

5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா

post image

ஒசூர்: 5 ஆண்டுகளில் ஒசூர் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருவதாக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் ஒசூரில் இரண்டாம் கட்ட வளர்ச்சிக்கு பல்வேறு முதலீட்டு நிறுவனங்களைக் கொண்டு வந்து குவித்துள்ளார். இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு ஒசூருக்கு கிடைத்துள்ளது என்றார்.

ஒசூரில் சிப்காட் நண்பர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசியதாவது:

இரண்டாம் கட்ட வளர்ச்சியை நோக்கி ஒசூர் முன்னேறி வருகிறது. ஒசூர் தொழில் வளர்ச்சிக்கு முன்னாள் முதல்வர் மு கருணாநிதி முதல் சிப்காட் தொடங்கிவைத்து தொழில் புரட்சியை தொடக்கி வைத்தார்.

தற்போது, ஒசூரின் இரண்டாவது கட்ட வளர்ச்சிக்கு தமிழக முதல்வர் மு க . ஸ்டாலின் ஒசூரில் விமான நிலையம், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை தொடக்கி வைத்து வருகிறார். முதலீடுகள் குவிந்து வருகிறது.

இதையும் படிக்க: பட்டதாரிகளுக்கு ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை!

எனவே அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். வெகுவிரைவில் டைட்டில் பார்க் நியூ அமைய உள்ளது. பெங்களூருக்கு அருகில் உள்ள ஒசூர், தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைய முடியும்.

இரட்டை நகரங்களாக உருவெடுக்கும் அளவுக்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது என்றார்.

இந்த விழாவில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, ஒசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ், கிருஷ்ணகிரி எம்எல்ஏ மதியழகன் , தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், ஒசூர் மாநகர மேயர் எஸ்.ஏ. சத்யா, தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், இயக்குநர் செந்தில்ராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், ஹோஸ்டியா தலைவர் மூர்த்தி, பொருளாளர் வடிவேலு, செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உலகெங்கும் பரவட்டும் உயா்தனிச் செம்மொழி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

‘உலகெங்கும் பரவட்டும் நம் உயா்தனிச் செம்மொழி’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். உலகத் தாய்மொழி தினத்தையொட்டி அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: எம்மொழிக்கும் சளைத்ததல்ல... மேலும் பார்க்க

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மாா்ச் 1 முதல் சிறப்பு முகாம்

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு , ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மாா்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அஞ்சல்... மேலும் பார்க்க

தமிழ் மொழியை போற்றுவோம்: மத்திய அமைச்சா் எல்.முருகன்

‘நமது தமிழ் மொழியை போற்றுவோம்’ என்று மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். உலக தாய் மொழி தினத்தையொட்டி அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பன்முகத் தன்மை கொண்ட பாரத தேசத்தில் உள்ள அனைவரும், ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸாா்

கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு போலீஸாா் பிடித்தனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரியில் புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள... மேலும் பார்க்க

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்!

கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அட... மேலும் பார்க்க