செய்திகள் :

ரேபரேலியில் கட்சித் தொண்டர்களுடன் ராகுல் சந்திப்பு!

post image

2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தனது நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேயிலில் இரண்டு பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, மாணவர்கள், கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில், பூமாவில் உள்ள அவரது நாடாளுமன்ற இல்லத்தில் கட்சித் தொண்டர்கள் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினர். குறிப்பாகத் தலித்துகள் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் அவருக்குத் தெரிவித்தனர்.

ரேபரேலியில் உள்ள காங்கிரஸ் பட்டியலினப் பிரிவின் தலைவர் சுனில் குமார் கௌதம், சமூகத்தைச் சேர்ந்த 12 பேர் கொண்ட குழு காந்தியை அவரது பூமாவில் சந்தித்ததாகக் கூறினார்.

பட்டியலின சமூகம் தொடர்பான பிரச்னைகள் குறித்து நாங்கள் டிவவாதித்தோம், மேலும் மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் அவருக்குத் தெரிவித்தோம்.

நகராட்சி அமைப்புகளில் பணிபுரியும் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் இது உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறுவதாகும் என்று அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தி தொண்டர்களை ஊக்குவித்து, கட்சி அமைப்பை வலுப்படுத்தும் அதேநேரத்தில் 2027 தேர்தலுக்குத் தீவிரமாகத் தயாராக வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

காங்கிரஸின் ரேபரேலி குழு துணைத் தலைவர் சர்வோத்தம் குமார் மிஸ்ரா, காந்தியின் தலைமையைப் பாராட்டினார், மேலும் அவரது நேர்மை, தொலைநோக்கு மற்றும் பணி நெறிமுறைகள் விவரிக்க முடியாதவை என்றும் அவர் கூறினார்.

'என்னை சாதாரணமாக நினைக்காதீர்கள்' - பட்னவீஸுக்கு ஷிண்டே எச்சரிக்கை!

தன்னை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸுக்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு காங்கிரஸ் - தேசியவாத கா... மேலும் பார்க்க

அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது -ராகுல் காந்தி

ரே பரேலி : தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது மக்களவைத் தொகுதியான ர... மேலும் பார்க்க

சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்கள் தேவை: அதிகாரிகள் எதிா்பாா்ப்பு

தில்லியில் அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசு சுகாதாரத் துறையில் முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த ஒரு செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோரிக்கை விட... மேலும் பார்க்க

உயா்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜி... மேலும் பார்க்க

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் ... மேலும் பார்க்க

பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவா் சுட்டுக் கொலை; சக மாணவா் கைது

பிகாரின் ரோத்தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை... மேலும் பார்க்க