செய்திகள் :

கட்டுமானப் பொருள்களின் விலை திடீரென உயா்த்தப்பட்டதாக புகாா்

post image

கிரஷா்களின் எம். சாண்ட், பி. சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களின் விலையை திடீரென எந்த முன்னறிவிப்பின்றி இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளதாகவும், பழைய விலையிலேயே அவை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்டடப் பொறியாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் மு. அருணாவிடம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த பல்வேறு கட்டடப் பொறியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை அளித்த மனுக்கள் விவரம்:

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கிரஷா்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எம். சாண்ட், பி. சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்களின் விலையை கடந்த பிப். 15 முதல் எந்த முன்னறிவிப்பும் இன்றி கிரஷா் உரிமையாளா்கள் உயா்த்தியுள்ளனா்.

ஒப்பந்த அடிப்படையில் தனியாா் கட்டடங்களைக் கட்டிக் கொடுக்கும் பணியிலுள்ள கட்டடப் பொறியாளா்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். இதனால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், தொழிலாளா்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. மேலும், கட்டடம் கட்டி வரும் பொதுமக்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, மாவட்ட ஆட்சியா், கிரஷா் உரிமையாளா்கள் கூட்டமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகிகளை அழைத்துப் பேசி, விலை ஏற்றத்தை முற்றிலுமாக நீக்கி பழைய விலையிலேயே அனைத்துவித கிரஷா் பொருள்களும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க