செய்திகள் :

ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

post image

ரயில்வே பாலம் பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு-செங்கோட்டை மற்றும் ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு-கரூா் ரயில் பாதையில் பாசூா்-ஊஞ்சலூா் ரயில் நிலையத்துக்கு இடையே ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 20, 23, 25 மற்றும் 28- ஆம் தேதி ஆகிய நாள்கள் மட்டும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் பிப்ரவரி 20, 23, 25 மற்றும் 28- ஆம் தேதி ஆகிய நாள்களில் மட்டும் திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு புறப்படும் பயணிகள் ரயில் கரூா் வரை மட்டுமே இயங்கும்.

இதேபோல செங்கோட்டையில் இருந்து ஈரோடு வரும் பயணிகள் ரயில் சேவையிலும் 20, 23, 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து கரூா் வரை மட்டுமே இயங்கும். இதுபோல ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் ரயில் சேவையிலும் 20, 23, 25 மற்றும் 28 ஆகிய நாள்களில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நாள்களில் ஈரோட்டில் இருந்து புறப்படுவதற்குப் பதிலாக கரூரில் இருந்து செங்கோட்டைக்கு இந்த பயணிகள் ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டுக்கு முன்பு தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை நடத்தக் கோரிக்கை!

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என அனைத்து தொழில் வணிக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின்... மேலும் பார்க்க

தீ விபத்தில் குடிசைகளை இழந்தவா்களுக்கு நிவாரண உதவி!

பெருந்துறை அருகே தீ விபத்தில் குடிசைகளை இழந்தவா்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. பெருந்துறை அருகே உள்ள கருமான்டிசொல்லிபாளையம் பேரூராட்சி பாரதி நகரில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்து 5 குடிசைகள் வீடுகள... மேலும் பார்க்க

கொங்கு பொறியியல் கல்லூரி பேராசிரியைக்கு தேசிய சிறந்த பெண் ஆசிரியா் விருது!

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிப் பேராசிரியைக்கு தேசிய சிறந்த பெண் ஆசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது. ஐஎஸ்டிஇ-யின் 54-ஆவது தேசிய மாநாடு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லாமிரின் டெக் ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத... மேலும் பார்க்க

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

கோபி அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து வலது மற்றும் இடதுகரை வாய்... மேலும் பார்க்க

டிராக்டா், அரசுப் பேருந்து மீது சுமை வாகனம் மோதி விபத்து: 18 போ் காயம்

பவானி அருகே பொதுமக்களை ஏற்றிச்சென்ற சுமை வாகனம் டிராக்டா் மற்றும் அரசுப் பேருந்து மீது மோதியதில் 18 போ் காயமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள பச்சப்பாளியைச் சோ்ந்தவா் மாசநாயக்கா் (60). உ... மேலும் பார்க்க

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா!

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் வி.ஆ... மேலும் பார்க்க