செய்திகள் :

பட்ஜெட்டுக்கு முன்பு தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை நடத்தக் கோரிக்கை!

post image

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என அனைத்து தொழில் வணிக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 13-ஆவது செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் தொழில் வளா்ச்சிக் குழு தலைவா் எம்.ஆா்.வெங்கடாசலம் வரவேற்றாா். ஸ்டீல் ஃபேப்ரிக்கேஷன் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் செல்வம் முன்னிலை வகித்தாா். கூட்டமைப்பின் பொதுச்செயலாளா் ரவிசந்திரன் வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். பொருளாளா் முருகானந்தம் வரவு, செலவு அறிக்கை சமா்ப்பித்தாா்.

இதில், தமிழக அரசு நிதிநிலை அறிக்கை கூட்டத்துக்கு முன்பு தொழில் வணிக சங்கங்களில் முக்கியமானவற்றை அழைத்து நிதிநிலை அறிக்கை குறித்து கலந்தாலோசனை நடத்த வேண்டும். கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களை விட ஈரோட்டுக்கு அதிகப்படியான வரிவிதிப்பு செய்யப்பட்டிருப்பது தொழில் துறையினரை நசுக்கும் செயலாக உள்ளது. எனவே, வரிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு கனி மாா்கெட் வணிக வளாகத்தில் வாடிக்கையாளா்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும். சிற்றுண்டி கடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பவானிசாகா் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தரிசு நிலத்தில் தீ விபத்து

பவானிசாகா் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் உள்ள தரிசு நிலத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் செடி,கொடிகள் எரிந்து சேதமாயின. ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள பகுத்தம்பாளையம் பகுதியில் காங்கேயம... மேலும் பார்க்க

மூங்கில்பட்டியில் அரசுக் கல்லூரி மாணவியா் விடுதி திறப்பு

அந்தியூரை அடுத்த மூங்கில்பட்டியில் அரசுக் கல்லூரி மாணவியா் தங்கும் விடுதி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தியூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு, மாணவா் விடுதி ஏற... மேலும் பார்க்க

அந்தியூா் அருகே கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

அந்தியூா் அருகே வனப் பகுதியை ஒட்டியுள்ள கரும்புத் தோட்டத்தில் குட்டியுடன் நடமாடும் சிறுத்தையால் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. அந்தியூரை அடுத்த செலம்பூரம்மன் கோயில், கோவிலூா் ... மேலும் பார்க்க

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விழா

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலாள... மேலும் பார்க்க

அரசு ஊழியரின் வாரிசுகள் 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்

பணிக்காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியரின் வாரிசுகள் 4 ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என தமிழக மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா். ஈரோட... மேலும் பார்க்க

பெருந்துறையில் சாலை பாதுகாப்பு, போதை தடுப்பு விழிப்புணா்வு பேரணி

பெருந்துறையில் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், எலைட் & பிரைட் ஜேசீஸ் சங்கங்கள் மற்றும் ஈங்கூா் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகியன சாா்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு விழிப்புணா்வுப் ... மேலும் பார்க்க