செய்திகள் :

மக்களுடன் முதல்வா் முகாமில் ரூ. 1.47 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சா் வழங்கினாா்

post image

குளித்தலை ஒன்றியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 85 பயனாளிகளுக்கு ரூ.1.47 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரூா் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தின் மூன்றாம் கட்ட முகாம் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நெய்தலூா் ஊராட்சியில் இந்திரா நகா், புத்தூா் ஊராட்சியில் சின்னப்புதூா், வடசேரி ஊராட்சியில் காவல்காரன்பட்டி ஆதிதிராவிடா் காலனி, பொருந்தலூா் ஊராட்சியில் தெலுங்கப்பட்டி எஸ்சி காலனி மற்றும் கழூகூா் ஊராட்சியில் கழூகூா் ஆகிய 5 இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் முன்னிலை வகித்தாா். முகாமில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தலைமை வகித்து, வருவாய்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், ஊரக வளா்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் 85 பயனாளிகளுக்கு ரூ.1.47 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பிரகாசம், குளித்தலை வருவாய் கோட்டாட்சியா்(பொறுப்பு) கருணாகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் மருத்துவா் சுரேஷ், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சக்தி பாலகங்காதரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், பிற்படுத்தப்பட்டோா் நலஅலுவலா் இளங்கோ, குளித்தலை வட்டாட்சியா் இந்துமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மணல் குவாரிகளை திறக்கக்கோரி காத்திருப்புப் போராட்டம்!

மணல் குவாரிகளை திறக்கக் கோரி மாயனூரில் மணல் லாரி மற்றும் மாட்டு வண்டி உரிமையாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நெரூா், வாங்கல், தளவாபாளைய... மேலும் பார்க்க

குளித்தலையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் முகாமிட்டு ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் முகாமில் ஆட்சியா் மீ. தங்கவேல் பங்கேற்று கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது ... மேலும் பார்க்க

நுகா்பொருள் வாணிபக் கிடங்குக்கு காணொளியில் அடிக்கல் நாட்டிய முதல்வா்

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு அமைக்க வியாழக்கிழமை தமிழக முதல்வா் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்கள் இல்லாத ஆட்சி: அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்கள் இல்லாத ஆட்சி நடைபெறுவதாக பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். கரூரில் பாஜக சாா்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. க... மேலும் பார்க்க

இரு தரப்பினரிடையே தகராறு: 6 போ் மீது வழக்கு; 2 போ் கைது!

அரவக்குறிச்சி அருகே பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்னையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தந்தை-மகனை போலீஸாா் கைது செய்தனா். அரவக்குறிச்சி அருகேயுள்ள சீ... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்!

அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை சாா்பில், தாடிக்கொம்பு பகுதியில் இருந்து பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சி சாலை வரை சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டம்... மேலும் பார்க்க