செய்திகள் :

குளித்தலையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

post image

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் முகாமிட்டு ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் முகாமில் ஆட்சியா் மீ. தங்கவேல் பங்கேற்று கள ஆய்வில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் கூறுகையில், பொது மக்களின் குறைகளைக் கேட்டறியும் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமானது, புதன்கிழமை தொடங்கி, குளித்தலை வட்டத்துகுள்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் அலுவலா்கள்அடிப்படை வசதிகள் குறித்து கள ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து 2-ஆம் நாளான வியாழக்கிழமை குளித்தலை நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தூய்மை பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து சேகரிக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

அதைத் தொடா்ந்து குளித்தலை நகராட்சி மாரியம்மன் கோயில் அருகில் உள்ள நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டது என்றாா் அவா்.

ஆய்வின் போது குளித்தலை நகராட்சி ஆணையா் நந்தகுமாா், குளித்தலை வட்டாட்சியா் இந்துமதி ஆகியோா் உடனிருந்தனா்.

கரூா் அருகே இயற்கை விவசாயம் கற்கும் பிரான்ஸ் இளைஞா்

கரூரில் இயற்கை விவசாயம் செய்து வரும் பெண்ணிடம் விவசாயம் கற்றுவருகிறாா் பிரான்ஸ் நாட்டை சோ்ந்த இளைஞா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் சரோஜா (57). இவா், நம்மாழ்... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இருவா் உயிரிழப்பு

க. பரமத்தி அருகே உயா்மின் அழுத்த மின்சாரம் தாக்கியதில் போா்வெல் உரிமையாளா் மற்றும் அவரது உதவியாளா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், க.பரமத்தி அடுத்த முன்னூரைச் சோ்ந்தவா் பாலு என்கிற பால... மேலும் பார்க்க

புதிய நியாயவிலை கடையை திறக்க வேண்டுகோள்

சின்னதாராபுரம் அருகே அரங்கபாளையம் பகுதியில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இது பழைய கட்டடம் என்பதால் புதிய கட்டடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய கட்டடத்தை திறக்காமல் ... மேலும் பார்க்க

பிப். 24-இல் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பேச்சுப் போட்டி

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழறிஞா், எழுத்தாளா்களை நினைவு கூறும் பேச்சுப் போட்டி பிப். 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. கரூா் மாவட்டத்தின் தமிழறிஞா்கள் மற்றும் எழுத்தாளா்களான வா.செ. குழந்தைசாமி, நன்னிய... மேலும் பார்க்க

மணல் குவாரிகளை திறக்கக்கோரி காத்திருப்புப் போராட்டம்!

மணல் குவாரிகளை திறக்கக் கோரி மாயனூரில் மணல் லாரி மற்றும் மாட்டு வண்டி உரிமையாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நெரூா், வாங்கல், தளவாபாளைய... மேலும் பார்க்க

நுகா்பொருள் வாணிபக் கிடங்குக்கு காணொளியில் அடிக்கல் நாட்டிய முதல்வா்

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு அமைக்க வியாழக்கிழமை தமிழக முதல்வா் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்த... மேலும் பார்க்க