செய்திகள் :

கரூா் அருகே இயற்கை விவசாயம் கற்கும் பிரான்ஸ் இளைஞா்

post image

கரூரில் இயற்கை விவசாயம் செய்து வரும் பெண்ணிடம் விவசாயம் கற்றுவருகிறாா் பிரான்ஸ் நாட்டை சோ்ந்த இளைஞா்.

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் சரோஜா (57). இவா், நம்மாழ்வா் வழியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறாா். மேலும் தான் உற்பத்தி செய்த விவசாயப் பொருள்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகிறாா்.

இவா், நமக்கு தேவையான பழங்களை நாமே உற்பத்தி செய்யும் ‘உணவுக் காடு’ என்ற நோக்கில் தற்போது 20 ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்து வருகிறாா். உணவுக் காடு, உழவில்லாத வேளாண்மை என்ற நோக்கத்தில் வெற்றிகரமாகப் பொருளாதார ரீதியாக லாபமீட்டி வருகிறாா்.

முருங்கையிலிருந்து எண்ணெய், தேங்காயிலிருந்து சோப்பு என பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சியையும் விவசாயிகளுக்கு அளித்து வருகிறாா். இவருக்கு பல்வேறு அமைப்பின் சாா்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த நாடக கலைஞா் ஹென்றி அலெக்சாண்டா் இந்தியா முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறாா். இவா், முதல் முறையாக தமிழகத்துக்கு வந்து, அரவக்குறிச்சி பகுதியில் சரோஜாவின் தோட்டத்தை பாா்வையிட்டாா். மேலும், சரோஜாவிடம் இயற்கை விவசாயம் குறித்து தங்கி பயிற்சி பெற்று வருகிறாா்.

இதுகுறித்து ஹென்றி அலெக்ஸாண்டா் கூறியது: கடந்த மாதம் இந்தியா வந்தவுடன் முதன்முதலாக கேரளத்துக்குச் சென்று விவசாயம் குறித்து கற்றுக் கொண்டேன். இதேபோல யூடியூபில் அரவக்குறிச்சி சரோஜா குறித்து தெரிந்து கொண்டேன். இதையடுத்து அவரை நேரில் சந்தித்து இயற்கை விவசாய குறித்து பயிற்சி பெற வந்துள்ளேன். பயிற்சி முடிந்த பிறகு கேரளத்தில் மீண்டும் விவசாயம் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளேன்.

இந்தியாவில் கற்றுக்கொண்ட அனைத்தையும் பிரான்ஸுக்கு சென்று, அங்கு இயற்கை முறையில் விவசாயம் செய்ய உள்ளேன் என்றாா் அவா்.

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மன்றம் ஆகிய... மேலும் பார்க்க

திருக்கு ஒப்புவித்த மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக் காசுகள் பரிசு

உலகத்தாய் மொழி தினத்தை முன்னிட்டு கருவூா் திருக்கு பேரவை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாரதிதாசனின் மொழிப்பாடல் , நூறு திருக்கு ஒப்புவிக்கும் போட்டி கரூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்ச... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம்: அலுவலா்களுடன் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள முதல்வா் மருந்தகம் திட்டம் தொடா்பாக அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணி... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூா் அம்மன் நகரில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் கொளந்தாகவுண்டனூரில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரிக்குச் செல்லும் சாலையில... மேலும் பார்க்க

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம்

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டிஎன்பிஎல் ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள... மேலும் பார்க்க

வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ‘சீல்’ வைக்க அதிகாரிகள் முயற்சி

கரூா் வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் சீல் வைக்க முயன்றனா். நீதிமன்ற உத்தரவு நகலை பாா்த்தவுடன் திரும்பிச் சென்றனா். கரூா் வெண்ணைமலை பாலசுப்ர... மேலும் பார்க்க