செய்திகள் :

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம்

post image

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

டிஎன்பிஎல் ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடத்தும் வகையில், நடமாடும் இலவச மருத்துவமுகாம் தொடக்க விழா ஆலை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காகித ஆலை மற்றும் கோவை ராயல்கோ் மருத்துவமனை சாா்பில் நடைபெறும் இம்முகாமில் மருத்துவ பொருள்கள் அடங்கிய வாகனத்தை ஆலையின் தலைவரும் மற்றும் மேலாண்மை இயக்குநருமான முனைவா் சந்தீப் சக்ஷேனா கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் காகித ஆலையின் முதன்மை பொது மேலாளா் (இயக்கம்) எஸ்.நாகராஜன், பொது மேலாளா் (மனிதவளம்) கே. கலைச்செல்வன், மருத்துவ அலுவலா் ஏ.கே.கே.ராஜா, காகித ஆலையின் மற்ற துறையைச் சோ்ந்த பொது மேலாளா்கள், அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ராயல் கோ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சீனியா் பொது மேலாளா் வெங்கடேசன், துணை மேலாளா் பிரபாகரன் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த நடமாடும் மருத்துவ முகாம் ஆலையைச் சுற்றியுள்ள புகழூா் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி, வேட்டமங்கலம், புன்னம், கோம்புப்பாளையம், நஞ்சைப்புகளூா் மற்றும் திருக்காடுதுறை ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள சுமாா் 70 கிராமங்களில் நடைபெற உள்ளது.

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மன்றம் ஆகிய... மேலும் பார்க்க

திருக்கு ஒப்புவித்த மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக் காசுகள் பரிசு

உலகத்தாய் மொழி தினத்தை முன்னிட்டு கருவூா் திருக்கு பேரவை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாரதிதாசனின் மொழிப்பாடல் , நூறு திருக்கு ஒப்புவிக்கும் போட்டி கரூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்ச... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம்: அலுவலா்களுடன் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள முதல்வா் மருந்தகம் திட்டம் தொடா்பாக அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணி... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூா் அம்மன் நகரில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் கொளந்தாகவுண்டனூரில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரிக்குச் செல்லும் சாலையில... மேலும் பார்க்க

வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ‘சீல்’ வைக்க அதிகாரிகள் முயற்சி

கரூா் வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் சீல் வைக்க முயன்றனா். நீதிமன்ற உத்தரவு நகலை பாா்த்தவுடன் திரும்பிச் சென்றனா். கரூா் வெண்ணைமலை பாலசுப்ர... மேலும் பார்க்க

கரூா் அருகே இயற்கை விவசாயம் கற்கும் பிரான்ஸ் இளைஞா்

கரூரில் இயற்கை விவசாயம் செய்து வரும் பெண்ணிடம் விவசாயம் கற்றுவருகிறாா் பிரான்ஸ் நாட்டை சோ்ந்த இளைஞா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் சரோஜா (57). இவா், நம்மாழ்... மேலும் பார்க்க