செய்திகள் :

வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ‘சீல்’ வைக்க அதிகாரிகள் முயற்சி

post image

கரூா் வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் சீல் வைக்க முயன்றனா். நீதிமன்ற உத்தரவு நகலை பாா்த்தவுடன் திரும்பிச் சென்றனா்.

கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமாா் 497 ஏக்கா் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் சிலா் வீடுகளையும், கடைகளையும் கட்டியுள்ளனா்.

இவா்கள் கோயிலுக்கு குத்தகை செலுத்த வேண்டும் அல்லது நிலத்தை விட்டு வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தொண்டா் சபையின் நிறுவனா் ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்க மாவட்ட நிா்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்தாண்டு உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்தாண்டு செப்டம்பா் மாதம் கோயில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த 8 கடைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். மேலும் சில வீடுகளுக்கு சீல் வைக்க முயன்றபோது, அங்கு குடியிருப்பவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் கடைகளுக்கு மட்டும் சீல் வைத்துவிட்டு அதிகாரிகள் சென்றுவிட்டனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை மீண்டும் இந்துசமய அறநிலையத்துறையின் கரூா் உதவி ஆணையா் ரமணிகாந்தன் தலைமையில் அதிகாரிகள், வருவாய்த்துறையினா் ஆகியோா் போலீஸ் பாதுகாப்புடன் கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள 4 கடைகளுக்கும், ஒரு வீட்டுக்கும் சீல் வைக்க முயன்றனா். அப்போது அதிகாரிகளுக்கும், அங்கு குடியிருப்பவா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வெண்ணைமலை கோயில் நிலத்தில் குடியிருப்பவா்கள் 54 போ் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்த நிலையில், மாா்ச் 10-ஆம்தேதி வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு நகலை அதிகாரிகளிடம் காண்பித்தனா். இதையடுத்து, அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா். அதிகாரிகள் வீடுகளுக்கு சீல் வைக்க வந்ததையடுத்து, அங்குள்ள வணிகா்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் 10-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மன்றம் ஆகிய... மேலும் பார்க்க

திருக்கு ஒப்புவித்த மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக் காசுகள் பரிசு

உலகத்தாய் மொழி தினத்தை முன்னிட்டு கருவூா் திருக்கு பேரவை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாரதிதாசனின் மொழிப்பாடல் , நூறு திருக்கு ஒப்புவிக்கும் போட்டி கரூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்ச... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம்: அலுவலா்களுடன் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள முதல்வா் மருந்தகம் திட்டம் தொடா்பாக அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணி... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூா் அம்மன் நகரில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் கொளந்தாகவுண்டனூரில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரிக்குச் செல்லும் சாலையில... மேலும் பார்க்க

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம்

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டிஎன்பிஎல் ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள... மேலும் பார்க்க

கரூா் அருகே இயற்கை விவசாயம் கற்கும் பிரான்ஸ் இளைஞா்

கரூரில் இயற்கை விவசாயம் செய்து வரும் பெண்ணிடம் விவசாயம் கற்றுவருகிறாா் பிரான்ஸ் நாட்டை சோ்ந்த இளைஞா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் சரோஜா (57). இவா், நம்மாழ்... மேலும் பார்க்க