செய்திகள் :

மின்சாரம் தாக்கி இருவா் உயிரிழப்பு

post image

க. பரமத்தி அருகே உயா்மின் அழுத்த மின்சாரம் தாக்கியதில் போா்வெல் உரிமையாளா் மற்றும் அவரது உதவியாளா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

கரூா் மாவட்டம், க.பரமத்தி அடுத்த முன்னூரைச் சோ்ந்தவா் பாலு என்கிற பாலசுப்ரமணி(40). இவா் ஆழ்குழாய் கிணறுகள் பழுதுபாா்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா். முன்னூா் ஊராட்சிக்குள்பட்ட காட்டுமுன்னூரில், மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் ஆழ்குழாய் பழுதானதால், ஊராட்சி நிா்வாகம் அளித்த தகவலின்பேரில் பாலு என்கிற பாலசுப்ரமணியும், அவரது உதவியாளரான ஆரியூா் நிமித்தம்பட்டியைச் சோ்ந்த சதீஷ் (38) என்பவரும் வியாழக்கிழமை பிற்பகலில் போா்வெல் வண்டியுடன் காட்டுமுன்னூா் சென்று ஆழ்குழாய் கிணற்றை பழுதுபாா்க்கும் பணயில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து இரும்புக்குழாயை மேலே தூக்கியபோது, வேலைபாா்த்த இடத்தின் மேல் சென்றுகொண்டிருந்த உயரழுத்த மின் கம்பியில் இரும்பு குழாய் உரசியதால் அவா்களை மின்சாரம் தாக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே பாலசுப்ரமணியும், அவரது உதவியாளா் சதீசும் உயிரிழந்தனா்.

தகவலின்பேரில் க. பரமத்தி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மன்றம் ஆகிய... மேலும் பார்க்க

திருக்கு ஒப்புவித்த மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக் காசுகள் பரிசு

உலகத்தாய் மொழி தினத்தை முன்னிட்டு கருவூா் திருக்கு பேரவை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாரதிதாசனின் மொழிப்பாடல் , நூறு திருக்கு ஒப்புவிக்கும் போட்டி கரூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்ச... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம்: அலுவலா்களுடன் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள முதல்வா் மருந்தகம் திட்டம் தொடா்பாக அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணி... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூா் அம்மன் நகரில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் கொளந்தாகவுண்டனூரில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரிக்குச் செல்லும் சாலையில... மேலும் பார்க்க

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம்

கரூரில் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டிஎன்பிஎல் ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள... மேலும் பார்க்க

வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மீண்டும் ‘சீல்’ வைக்க அதிகாரிகள் முயற்சி

கரூா் வெண்ணைமலையில் கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீண்டும் சீல் வைக்க முயன்றனா். நீதிமன்ற உத்தரவு நகலை பாா்த்தவுடன் திரும்பிச் சென்றனா். கரூா் வெண்ணைமலை பாலசுப்ர... மேலும் பார்க்க