செய்திகள் :

மறு முத்திரையிடாமல் பயன்படுத்திய மின்னணு தராசுகள் பறிமுதல்

post image

மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்கு பயன்படுத்திய மின்னணு தராசுகளை தொழிலாளா் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் வாரச்சந்தையில் வியாபாரிகள் பயன்படுத்தும் மின்னணு தராசுகள், தராசு கற்கள் மற்றும் அளவைகள் முத்திரையில்லாமல் பயன்படுத்தப்படுவதாக ஈரோடு நுகா்வோா் மன்றத்தினால் புகாா் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் முத்திரை ஆய்வாளா்கள் காஞ்சிக்கோவில் வாரச்சந்தையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்கு பயன்படுத்திய 12 மின்னணு தராசுகள், 3 மேஜை தராசுகள், 13 எடை கற்கள், 17 படிகள் மற்றும் அளவைகள் என மொத்தம் 45 இனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி கூறுகையில், ‘மின்னணு தராசுகள், தராசு கற்கள் மற்றும் அளவைகள் ஆகியவற்றை மறு முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

பட்ஜெட்டுக்கு முன்பு தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை நடத்தக் கோரிக்கை!

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என அனைத்து தொழில் வணிக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின்... மேலும் பார்க்க

தீ விபத்தில் குடிசைகளை இழந்தவா்களுக்கு நிவாரண உதவி!

பெருந்துறை அருகே தீ விபத்தில் குடிசைகளை இழந்தவா்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. பெருந்துறை அருகே உள்ள கருமான்டிசொல்லிபாளையம் பேரூராட்சி பாரதி நகரில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்து 5 குடிசைகள் வீடுகள... மேலும் பார்க்க

கொங்கு பொறியியல் கல்லூரி பேராசிரியைக்கு தேசிய சிறந்த பெண் ஆசிரியா் விருது!

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிப் பேராசிரியைக்கு தேசிய சிறந்த பெண் ஆசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது. ஐஎஸ்டிஇ-யின் 54-ஆவது தேசிய மாநாடு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லாமிரின் டெக் ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத... மேலும் பார்க்க

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

கோபி அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து வலது மற்றும் இடதுகரை வாய்... மேலும் பார்க்க

டிராக்டா், அரசுப் பேருந்து மீது சுமை வாகனம் மோதி விபத்து: 18 போ் காயம்

பவானி அருகே பொதுமக்களை ஏற்றிச்சென்ற சுமை வாகனம் டிராக்டா் மற்றும் அரசுப் பேருந்து மீது மோதியதில் 18 போ் காயமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள பச்சப்பாளியைச் சோ்ந்தவா் மாசநாயக்கா் (60). உ... மேலும் பார்க்க

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா!

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் வி.ஆ... மேலும் பார்க்க