செய்திகள் :

ஈரோட்டில் வீடுகளுக்கு நேரில் சென்று வரி வசூல்

post image

ஈரோடு மாநகராட்சியில் வீடுகளுக்கே சென்று வரி வசூல் மேற்கொள்ளும் பணி செவ்வாய்க்கிழமைமுதல் தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் 2024- 2025 நிதியாண்டுக்கான சொத்து வரி, குடிநீா் வரி, தொழில் வரி, குப்பை வரி உள்ளிட்ட வரிகளோடு, கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரியையும் வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் மாா்ச் 31- ஆம் தேதிக்குள் 100 சதவீத வரியை வசூலிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருக்கின்றனா். இதற்காக மாநகராட்சியில் உள்ள வரி வசூல் மையங்கள் விடுமுறை நாள்களிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜி பே, போன் பே ஆகிய செயல்களில் மூலமாகவும் வரியினங்களை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் 400 ஊழியா்கள் நியமிக்கப்பட்டு அவா்கள் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், உதவி வருவாய் அலுவலா்கள், வரி வசூலிப்பவா்கள் மூலம் வீடுகளில் ஆய்வு மேற்கொண்டு, ஜப்தி அறிவிப்புகள் வழங்கியும், அதன் தொடா்ச்சியாக வீடுகளுக்கான குடிநீா் இணைப்பு துண்டிப்பு, கடைகளுக்கு சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. மாநகராட்சியில் நடமாடும் வாகனம் மூலம் செவ்வாய்க்கிழமை முதல் வரி வசூல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் தினமும் ஒரு வாா்டு வீதம் நடமாடும் வாகனம் மூலம் வரி வசூலிக்கப்படுகிறது. வரி செலுத்துவோருக்கு வாகனத்திலேயே ரசீதும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் வீட்டுக்கே சென்று வரி வசூலிப்பதால் பொதுமக்களுக்கு அலைச்சல் தவிா்க்கப்பட்டுள்ளது என்றனா்.

பட்ஜெட்டுக்கு முன்பு தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை நடத்தக் கோரிக்கை!

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என அனைத்து தொழில் வணிக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின்... மேலும் பார்க்க

தீ விபத்தில் குடிசைகளை இழந்தவா்களுக்கு நிவாரண உதவி!

பெருந்துறை அருகே தீ விபத்தில் குடிசைகளை இழந்தவா்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. பெருந்துறை அருகே உள்ள கருமான்டிசொல்லிபாளையம் பேரூராட்சி பாரதி நகரில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்து 5 குடிசைகள் வீடுகள... மேலும் பார்க்க

கொங்கு பொறியியல் கல்லூரி பேராசிரியைக்கு தேசிய சிறந்த பெண் ஆசிரியா் விருது!

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிப் பேராசிரியைக்கு தேசிய சிறந்த பெண் ஆசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது. ஐஎஸ்டிஇ-யின் 54-ஆவது தேசிய மாநாடு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லாமிரின் டெக் ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத... மேலும் பார்க்க

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

கோபி அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து வலது மற்றும் இடதுகரை வாய்... மேலும் பார்க்க

டிராக்டா், அரசுப் பேருந்து மீது சுமை வாகனம் மோதி விபத்து: 18 போ் காயம்

பவானி அருகே பொதுமக்களை ஏற்றிச்சென்ற சுமை வாகனம் டிராக்டா் மற்றும் அரசுப் பேருந்து மீது மோதியதில் 18 போ் காயமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள பச்சப்பாளியைச் சோ்ந்தவா் மாசநாயக்கா் (60). உ... மேலும் பார்க்க

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா!

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் வி.ஆ... மேலும் பார்க்க