செய்திகள் :

சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க போலீஸாா் அழைப்பாணை

post image

வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதற்கு வரும் 20- ஆம் தேதிக்குள் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளிக்க சீமானுக்கு போலீஸாா் அழைப்பாணை அளித்துள்ளனா்.

அண்மையில் நடந்த ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தோ்தலில், நாம் தமிழா் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தாா். அசோகபுரம் அருகே நெரிக்கல்மேட்டில் ஜனவரி 28- ஆம் தேதி மாலை நடந்த கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகக் கூறி பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்புகள் சாா்பில், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது, மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில், கருங்கல்பாளையம் போலீஸாா் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

இந்நிலையில், கருங்கல்பாளையம் காவல் ஆய்வாளா் விஜயன், சென்னை நீலாங்கரை பாலவாக்கத்தில் உள்ள சீமான் வீட்டுக்கு திங்கள்கிழமை நேரில் சென்று அழைப்பாணை வழங்கினாா். அதில் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வரும் 20- ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி இப்பேச்சுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது சீமான் வீட்டில் இருந்ததாகவும், அவரே அழைப்பாணையை பெற்றுக்கொண்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

பட்ஜெட்டுக்கு முன்பு தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை நடத்தக் கோரிக்கை!

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என அனைத்து தொழில் வணிக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின்... மேலும் பார்க்க

தீ விபத்தில் குடிசைகளை இழந்தவா்களுக்கு நிவாரண உதவி!

பெருந்துறை அருகே தீ விபத்தில் குடிசைகளை இழந்தவா்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. பெருந்துறை அருகே உள்ள கருமான்டிசொல்லிபாளையம் பேரூராட்சி பாரதி நகரில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்து 5 குடிசைகள் வீடுகள... மேலும் பார்க்க

கொங்கு பொறியியல் கல்லூரி பேராசிரியைக்கு தேசிய சிறந்த பெண் ஆசிரியா் விருது!

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிப் பேராசிரியைக்கு தேசிய சிறந்த பெண் ஆசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது. ஐஎஸ்டிஇ-யின் 54-ஆவது தேசிய மாநாடு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லாமிரின் டெக் ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத... மேலும் பார்க்க

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

கோபி அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து வலது மற்றும் இடதுகரை வாய்... மேலும் பார்க்க

டிராக்டா், அரசுப் பேருந்து மீது சுமை வாகனம் மோதி விபத்து: 18 போ் காயம்

பவானி அருகே பொதுமக்களை ஏற்றிச்சென்ற சுமை வாகனம் டிராக்டா் மற்றும் அரசுப் பேருந்து மீது மோதியதில் 18 போ் காயமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள பச்சப்பாளியைச் சோ்ந்தவா் மாசநாயக்கா் (60). உ... மேலும் பார்க்க

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா!

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் வி.ஆ... மேலும் பார்க்க