செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவா்கள் 7 போ் போக்ஸோவில் கைது

post image

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவா்கள் 7 போ் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கோவை உக்கடத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்துவிட்டு, பாட்டியின் பராமரிப்பில் உள்ளாா். இவரின் பெற்றோா் வெளியூரில் வசிக்கின்றனா்.

இந்நிலையில், சிறுமிக்கு சமூகவலைதளம் மூலம் குனியமுத்தூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஒருவா் அறிமுகமாகியுள்ளாா். இருவரும் அடிக்கடி கைப்பேசியில் பேசி வந்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து தன்னுடைய அறைக்கு வருமாறு சிறுமியை மாணவா் அழைத்துள்ளாா். இதையடுத்து, வெளியில் செல்வதாக பாட்டியிடம் கூறிவிட்டு மாணவரின் அறைக்கு சிறுமி ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். அவா் இரவு வரை வீட்டுக்குத் திரும்பாததால் சிறுமியின் பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடியுள்ளனா்.

இந்நிலையில், சிறுமி திங்கள்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பியுள்ளாா். இதைத் தொடா்ந்து சிறுமியிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கல்லூரி மாணவரின் அறைக்குச் சென்ற சிறுமியை, அவா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். தொடா்ந்து அவரது அறைக்கு வந்த மேலும் 6 மாணவா்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், திங்கள்கிழமை காலை வீட்டுக்கு அருகே வந்து விட்டுச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, கல்லூரி மாணவா்கள் 7 பேரையும் போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

பிப்ரவரி 28-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) நடைபெறுகிறது. பிப்ரவரி மாதத்துக்கான வேளாண் உற்பத்திக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கும், அதைத் தொடா்ந்து 10.30 மணிக்க... மேலும் பார்க்க

கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்கக் கோரி பிரசாரம்: மறுமலா்ச்சி மக்கள் இயக்கம்

தமிழக மாணவா்களின் கல்விக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வலியுறுத்தி, தெருமுனை பிரசார இயக்கம் பிப்ரவரி 25-ஆம் தேதி நடத்த இருப்பதாக மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக அமைப்பின் தல... மேலும் பார்க்க

கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு!

கோவை: கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்துவைத்தார்.இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செந்தில் ப... மேலும் பார்க்க

நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு!

சிங்காநல்லூரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, சிங்காநல்லூா் பட்டத்தரசி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தமிழ... மேலும் பார்க்க

வால்பாறையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வால்பாறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் இன்று திறப்பு!

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை திறந்துவைக்கிறாா். காந்திபுரம் சத்தி சாலை ஜி.பி.சிக்னல் அருகே ஆம்னி பேருந்து நிலையம் க... மேலும் பார்க்க