செய்திகள் :

கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு!

post image

கோவை: கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க : தில்லி: 6 அமைச்சர்கள் பெயர் அறிவிப்பு! யார்யார்?

கோவை காந்திபுரம் பகுதியில் ரூ. 3.68 கோடி மதிப்பில் ஆம்னி பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது. 35 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வசதிகள், பாலூட்டும் அறை, காத்திருப்போர் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கட்டண கழிப்பிடம் மற்றும் 32 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையத்தை மக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர் கே.என்.நேரு வியாழக்கிழமை திறந்துவைத்தார். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அரசு கொறாடா ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த நிகழ்வில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட நகராட்சி பகுதிகளில் ரூ. 30.72 கோடி மதிப்பீட்டில் முடிவற்ற 15 புதிய திட்டப் பணிகள் திறப்பு மற்றும் ரூ. 271 கோடி மதிப்பீட்டில் 1,028 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில்... மேலும் பார்க்க

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத... மேலும் பார்க்க

கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழ... மேலும் பார்க்க