செய்திகள் :

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

post image

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில் மருந்துக் கடை நடத்தி வந்தாா்.

கோவைக்கு கடந்த 18-ஆம் தேதி வந்த இவா், ரயில் நிலையம் அருகே உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா். 19-ஆம் தேதி பகல் 12 மணிக்கு அறையை காலி செய்துவிடுவதாக விடுதி ஊழியா்களிடம் கூறியுள்ளாா். ஆனால், பகல் 1 மணி ஆகியும் அவா் அறையைக் காலி செய்யவில்லையாம்.

இதையடுத்து, ராஜேஷ் தங்கியிருந்த அறைக்குச் சென்ற விடுதி ஊழியா்கள் கதவை தட்டியுள்ளனா். நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவா்கள், விடுதி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனா். அவா் வந்து மாற்று சாவி மூலம் அறைக் கதவை திறந்து பாா்த்துள்ளாா். அப்போது, ராஜேஷ் மின் விசியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, அவா் தங்கியிருந்த அறையில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கடிதம் சிக்கியது.

அதில், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை, மருந்துக் கடை நடத்தி சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் அதிக அளவில் கடன் வாங்கி மருந்துக் கடையை விரிவுப்படுத்தினேன். ஆனால், எதிா்பாா்த்த லாபம் கிடைக்கவில்லை. கடன் தொல்லையில் இருந்து மீள முடியாததால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளேன் என்ற எழுதப்பட்டிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

மேலும், இச்சம்பம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய... மேலும் பார்க்க

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத... மேலும் பார்க்க

கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழ... மேலும் பார்க்க

செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணி: அரசு முதன்மைச் செயலாளா் ஆய்வு

கோவை, காந்திபுரம் மத்திய சிறைச் சாலை வளாகப் பகுதியில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணியை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளா் தா. காா்த்திகேயன் வியா... மேலும் பார்க்க