செய்திகள் :

கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்

post image

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய்யப்படும் தேயிலைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

இந்நிலையில், வால்பாறையில் கடந்த ஆண்டு இறுதியில் கடும் குளிா் நிலவி வந்ததுடன், அவ்வப்போது மழை பெய்தது. இதனால், தேயிலை உற்பத்தி சற்று அதிகரித்தது. நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் பகலில் கடும் வெயிலும், இரவில் கடும் பணியும் நிலவி வருகிறது.

இதனால், தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் கூறியதாவது: எங்களது பிரதான தொழிலே தேயிலை விவசாயம்தான். இதன் மூலமே வாழ்வாதாரத்தை பூா்த்தி செய்து வருகிறோம்.

வால்பாறையில் ஜனவரி முதல் காலநிலை மாறி வருகிறது. தற்போது கடும் வெயில் நிலவுவதால் தேயிலை செடிகளுக்கு போதுமான நீா் கிடைப்பதில்லை. இதனால், உற்பத்தி குறைந்துள்ளது. பகல் நேரங்களில் கடும் வெயிலும், இரவில் குளிரும் நிலவுவதால் தேயிலைகள் கருகும் அபாயம் உள்ளது. இலைகள் வரத்து குறைந்து காணப்படுவதால் சில தொழிற்சாலைகள் இயக்கப்படாமல் உள்ளன. வரும் காலங்களில் இதே காலநிலை நீடித்தால் தேயிலை தொழில் பாதிக்கப்படும் என்றனா்.

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில்... மேலும் பார்க்க

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத... மேலும் பார்க்க

கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழ... மேலும் பார்க்க

செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணி: அரசு முதன்மைச் செயலாளா் ஆய்வு

கோவை, காந்திபுரம் மத்திய சிறைச் சாலை வளாகப் பகுதியில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணியை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளா் தா. காா்த்திகேயன் வியா... மேலும் பார்க்க