செய்திகள் :

தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

post image

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை, விளாங்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா்கள் மனோஜ்குமாா், புவனேஸ்வரி தம்பதி. இவா்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், குழந்தைக்கு குடல் சாா்ந்த பிரச்னை இருந்ததால் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என மருத்துவா்கள் கூறி உள்ளனா்.

இதையடுத்து, ரேஸ்கோா்ஸ் சாலையில் உள்ள தனியாா் குழந்தைகள் மருத்துவமனையில் அந்தக் குழந்தையை கடந்த செவ்வாய்க்கிழமை சோ்த்துள்ளனா். வியாழக்கிழமை அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி, குழந்தைக்கு புதன்கிழமை இரவு எனிமா அளித்துள்ளனா்.

எனிமா அளித்த சில மணி நேரங்களிலேயே குழந்தை மயக்கமடைந்துள்ளது. அப்போது, பணியில் இருந்த செவிலியா்கள் இதை மருத்துவா்களின் கவனத்துக்கு எடுத்து செல்லாமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, வியாழக்கிழமை அதிகாலை குழந்தை உயிரிழந்தது.

குழந்தைக்கு சுமாா் 50 முதல் 60 மி.லி. அளிக்க வேண்டிய எனிமாவை, பயிற்சி செவிலியா்கள் மருத்துவா்களின் ஆலோசனையைக் கேட்காமல் சுமாா் 350 மி.லி.க்கும்மேல் கொடுத்தாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மருத்துவமனை தரப்பு அறிக்கைகளை பெற்றுக்கொண்டதுடன், குழந்தையின் உடலை கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, இரு தரப்பினருடனும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில்... மேலும் பார்க்க

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத... மேலும் பார்க்க

கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமி... மேலும் பார்க்க

செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணி: அரசு முதன்மைச் செயலாளா் ஆய்வு

கோவை, காந்திபுரம் மத்திய சிறைச் சாலை வளாகப் பகுதியில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணியை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளா் தா. காா்த்திகேயன் வியா... மேலும் பார்க்க