செய்திகள் :

எதிர்பாராத கேள்விகளுடன் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு இயற்பியல் வினாத்தாள்!

post image

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அறிவியல் பாடப்பிரிவில் மிக முக்கிய பாடமாகக் கருதப்படும் இயற்பியல் பாடம் மாணவர்களுக்கு சற்று கடினமான பாடம் என்பதாலும், கட்-ஆப் மதிப்பெண் கணக்கிடப்படும் பாடம் என்பதாலும், இந்தத் தேர்வு மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற இயற்பியல் பாடத்தேர்வில் கொடுக்கப்பட்ட வினாத்தாள் சற்று கடினமானதாக இருந்ததாகவும், சரியான விடையைத் தேர்வு செய்யும் பிரிவில் மிகவும் நுணுக்கமான கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகவும், கணித முறையில் அமைந்த வினாக்கள் மிக நீண்டதாக இருந்ததாகவும் மாணவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும், சில எதிர்பாராத கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகவும் ஒரு சில மாணவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த தேர்வில் அதிக பயிற்சி பெற்ற மாணவர்களுக்கும் நீளமான கேள்விகளால் நேர மேலாண்மையில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.

அதாவது, ஒரு சில மாணவர்கள்தான் தேர்வை உரிய நேரத்துக்குள் முழுமையாக எழுதி முடித்ததாகவும், பல மாணவர்களால் உரிய நேரத்துக்குள் முடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

முழு மதிப்பெண் எடுக்க திட்டமிட்டிருந்த மாணவர்களும் இந்த முறை 95க்கும் அதிகமான மதிப்பெண் பெறுவதே கடினமாக இருக்கலாம் என்றும் சில ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க

கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க

பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்

கேரளத்தில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.கொச்சியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்... மேலும் பார்க்க

சாலைகளிலுள்ள கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறைக்குத் தில்லி அரசு உத்தரவு: ஆஷிஷ் சூட்

சாலைகளில் உள்ள சட்டவிரோத கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றத் தில்லி அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆஷிஷ் சூட் கூறுவதாவது, ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!

பெங்களூரில் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு தனியார் புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நியமித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரு... மேலும் பார்க்க

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!

ஒருவர் ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பது போல ஜிமெயில் வைத்திருப்பதும் அத்தியாவசியமாகிவிட்ட இந்தக் காலத்தில், வெறும் ஜிமெயில் கணக்கைத் தொடங்கிவிட்டால் மட்டும் போதாது.அதனை முறையாக பராமரிக்கவும் வே... மேலும் பார்க்க