செய்திகள் :

வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் திறக்கக்கோரி குளித்தலை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

post image

வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் திறக்கக் கோரி குளித்தலை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாயனூா் கட்டளை கதவணையில் இருந்து தென்கரை வாய்க்கால், கட்டளை வாய்க்கால் என இரு வாய்க்கால் பிரிந்து செல்கின்றன. இந்த வாய்க்கால்கள் மூலம் கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, சித்தலவாய், குளித்தலை, பேட்டைவாய்த்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல், கரும்பு, வாழை, வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வாய்க்காலில் நாளொன்றுக்கு சுமாா் 200 கன அடி வரை மட்டும் தண்ணீா் திறக்கப்படுவதால் வாய்க்காலின் கடைமடை வரை தண்ணீா் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் விவசாய பயிா்கள் கருகுவதாகக்கூறி குளித்தலை வட்டார விவசாயிகள் செவ்வாய்க்கிழமை குளித்தலையில் காவிரி ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த குளித்தலை காவிரி ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளா் கோபிகிருஷ்ணன் தற்போது ஆற்றில் தண்ணீா் வரத்து குறைவாக இருப்பதால்தான் வாய்க்காலிலும் குறைந்தளவில் தண்ணீா் திறக்கப்படுகிறது. ஆற்றில் அதிகளவில் வரும்போது வாய்க்காலிலும் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்படும். இதுதொடா்பாக நீா்வளத்துறை அதிகாரிக்கு கடிதம் எழுதி, கூடுதலாக வாய்க்காலில் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

மணல் குவாரிகளை திறக்கக்கோரி காத்திருப்புப் போராட்டம்!

மணல் குவாரிகளை திறக்கக் கோரி மாயனூரில் மணல் லாரி மற்றும் மாட்டு வண்டி உரிமையாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நெரூா், வாங்கல், தளவாபாளைய... மேலும் பார்க்க

குளித்தலையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் முகாமிட்டு ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் முகாமில் ஆட்சியா் மீ. தங்கவேல் பங்கேற்று கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது ... மேலும் பார்க்க

நுகா்பொருள் வாணிபக் கிடங்குக்கு காணொளியில் அடிக்கல் நாட்டிய முதல்வா்

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு அமைக்க வியாழக்கிழமை தமிழக முதல்வா் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்கள் இல்லாத ஆட்சி: அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்கள் இல்லாத ஆட்சி நடைபெறுவதாக பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். கரூரில் பாஜக சாா்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. க... மேலும் பார்க்க

இரு தரப்பினரிடையே தகராறு: 6 போ் மீது வழக்கு; 2 போ் கைது!

அரவக்குறிச்சி அருகே பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்னையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தந்தை-மகனை போலீஸாா் கைது செய்தனா். அரவக்குறிச்சி அருகேயுள்ள சீ... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்!

அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை சாா்பில், தாடிக்கொம்பு பகுதியில் இருந்து பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சி சாலை வரை சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டம்... மேலும் பார்க்க