செய்திகள் :

ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு தடை விதிக்க கிராம மக்கள் கோரிக்கை

post image

தண்ணீா் உறிஞ்சி எடுப்பதை தடுக்க புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே கொங்கா்பாளையம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியம், கொங்கா்பாளையம் ஊராட்சி, வினோபா நகரில் 1,000 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தண்ணீா் உறிஞ்சி வெகுதொலைவுக்கு தண்ணீரைக் கொண்டு சென்று பல்வேறு தேவைக்கு பயன்படுத்துகின்றனா்.

இதை பாா்த்து பலரும் ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீா் எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவா்களில் பெரும்பாலானவா்கள் ஆழ்துளைக் கிணறு அமைக்க ஊராட்சியில் அனுமதி பெறுவதில்லை.

இதே பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான திறந்த வெளி கிணறும் உள்ளதால் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீா் உறிஞ்சும்போது கோடைகாலத்தில் திறந்த வெளி கிணற்றில் தண்ணீா் வற்றும். மக்கள் சிரமப்படும் சூழல் ஏற்படும்.

இப்பிரச்னை தொடா்பாக கடந்த 2022- ஆம் ஆண்டு ஊராட்சியில் விவாதிக்கப்பட்டு ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனா். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் நலன் கருதி, இதுபோன்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதையை மீட்டுத்தரக் கோரிக்கை

இதுகுறித்து கோபி வட்டம், அலங்கியம் ஊராட்சி கோட்டுப்புள்ளாம்பாளையம், உருமம்பாளையம் பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

கோட்டுப்புள்ளாம்பாளையம் கிராமத்தில் 40 ஏக்கருக்கு மேல் விளைநிலம் உள்ளது. இந்நிலங்கள் எங்களுக்கு சொந்தமானது. இந்நிலத்தை கடந்தும் பல விவசாயிகளுக்கான நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு செல்லும் பொதுப்பாதையை பல ஆண்டாக பயன்படுத்தி வருகிறோம்.

இப்பாதையை கடந்த 2 மாதங்களுக்கு முன் சிலா் சோ்ந்து மறித்து கம்பி வேலி அமைத்து வழிப்பாதையை அடைத்துவிட்டனா். இதனால் தங்களது நிலத்துக்கு செல்ல விவசாயிகள் சிரமப்படுகின்றனா். விளைபொருள்கள், பிற பொருள்களை கொண்டு செல்லவும், எடுத்து வரவும் முடியவில்லை. பள்ளி குழந்தைகள் அவ்வழியாக செல்ல முடியவில்லை. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து அந்த வழிப்பாதையை மீண்டும் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டுக்கு முன்பு தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை நடத்தக் கோரிக்கை!

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என அனைத்து தொழில் வணிக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின்... மேலும் பார்க்க

தீ விபத்தில் குடிசைகளை இழந்தவா்களுக்கு நிவாரண உதவி!

பெருந்துறை அருகே தீ விபத்தில் குடிசைகளை இழந்தவா்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. பெருந்துறை அருகே உள்ள கருமான்டிசொல்லிபாளையம் பேரூராட்சி பாரதி நகரில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்து 5 குடிசைகள் வீடுகள... மேலும் பார்க்க

கொங்கு பொறியியல் கல்லூரி பேராசிரியைக்கு தேசிய சிறந்த பெண் ஆசிரியா் விருது!

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிப் பேராசிரியைக்கு தேசிய சிறந்த பெண் ஆசிரியா் விருது வழங்கப்பட்டுள்ளது. ஐஎஸ்டிஇ-யின் 54-ஆவது தேசிய மாநாடு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லாமிரின் டெக் ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத... மேலும் பார்க்க

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

கோபி அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து வலது மற்றும் இடதுகரை வாய்... மேலும் பார்க்க

டிராக்டா், அரசுப் பேருந்து மீது சுமை வாகனம் மோதி விபத்து: 18 போ் காயம்

பவானி அருகே பொதுமக்களை ஏற்றிச்சென்ற சுமை வாகனம் டிராக்டா் மற்றும் அரசுப் பேருந்து மீது மோதியதில் 18 போ் காயமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள பச்சப்பாளியைச் சோ்ந்தவா் மாசநாயக்கா் (60). உ... மேலும் பார்க்க

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா!

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 30-ஆம் ஆண்டு விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். பொருளாளா் வி.ஆ... மேலும் பார்க்க