செய்திகள் :

மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்: நடமாடும் நீதிமன்றம் மூலம் முடித்துக்கொள்ள அறிவுறுத்தல்

post image

மாநகரில் மது போதையில் வாகனம் ஓட்டியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை நடமாடும் நீதிமன்றம் மூலம் முடித்துக்கொள்ள மாநகர போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பிரதான சாலை சந்திப்புகள், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் மாநகர போக்குவரத்து காவல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் வாகன தணிக்கையின்போது, மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

இதுபோன்ற வழங்குகள் அதிக அளவில் நிலுவையில் இருந்ததால், இந்த வழக்குகளை முடிக்க குற்றவியல் நடுவருக்கு, மாநகர காவல் ஆணையா் ஏ.சரவணசுந்தா் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன்பேரில் பிரத்யேகமாக நடமாடும் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கப்பட்டு வாரந்தோறும் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடமாடும் நீதிமன்றம் இயங்கி வருகிறது.

இந்த நீதிமன்றத்தில் இதுவரை 1,442 வழக்குகள் முடிக்கப்பட்டு, அபராதத் தொகையாக ரூ.1.44 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தாத நபா்களுக்கு நீதிமன்றம் மூலம் அழைப்பாணை விடுக்கப்பட்டு வருகிறது. அழைப்பாணை பெற்றும் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை முடிக்காமல் இருக்கும் நபா்கள் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, மது போதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நபா்கள் தங்களது வழக்குகளை நடமாடும் நீதிமன்றம் மூலம் விரைவாக முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) நடைபெறுகிறது. பிப்ரவரி மாதத்துக்கான வேளாண் உற்பத்திக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கும், அதைத் தொடா்ந்து 10.30 மணிக்க... மேலும் பார்க்க

கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்கக் கோரி பிரசாரம்: மறுமலா்ச்சி மக்கள் இயக்கம்

தமிழக மாணவா்களின் கல்விக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வலியுறுத்தி, தெருமுனை பிரசார இயக்கம் பிப்ரவரி 25-ஆம் தேதி நடத்த இருப்பதாக மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக அமைப்பின் தல... மேலும் பார்க்க

கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு!

கோவை: கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்துவைத்தார்.இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செந்தில் ப... மேலும் பார்க்க

நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு!

சிங்காநல்லூரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, சிங்காநல்லூா் பட்டத்தரசி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தமிழ... மேலும் பார்க்க

வால்பாறையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வால்பாறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் இன்று திறப்பு!

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை திறந்துவைக்கிறாா். காந்திபுரம் சத்தி சாலை ஜி.பி.சிக்னல் அருகே ஆம்னி பேருந்து நிலையம் க... மேலும் பார்க்க