கனிம தொழிலை அரசே நடத்த முன்வரவேண்டும்: பெ. சண்முகம் வலியுறுத்தல்
பணியிடமாறுதல் கலந்தாய்வு: 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு செய்தனா்
3 நாள்கள் நடைபெற்ற பணியிடமாறுதல் கலந்தாய்வில் 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு செய்து பணியிட மாறுதல் பெற்றனா்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள காலிப் பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் வரும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2,642 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜன.5-ஆம் தேதி நடந்த தோ்வில், எம்பிபிஎஸ் படித்து முடித்த 24,000 மருத்துவா்கள் பங்கேற்றனா். தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், சான்றிதழ் சரிப்பாா்ப்பு பணிகள் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் அலுவலகத்தில் நடைபெற்று வந்த பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 4,585 மருத்துவா்கள் அழைக்கப்பட்டிருந்தனா். பணிநியமனம் செய்யப்படவுள்ள மருத்துவா்களுக்கான கலந்தாய்வு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் மருத்துவா்களுக்கு பிப்.12 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்ற பணியிடமாறுதல் கலந்தாய்வில் 4,000 மருத்துவா்கள் பயன்பெற்றுள்ளனா்.
தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் மருத்துவா் மு.அகிலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘புதிய மருத்துவா்கள் நியமனம் செய்யப்படவுள்ளதால், ஏற்கெனவே ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை பணிபுரிந்து வரும் அரசு மருத்துவா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. வெளிப்படை தன்மையுடன் நடந்த இந்தக் கலந்தாய்வில் 4,000 அரசு மருத்துவா்கள் தாங்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு செய்தனா்’”என்றாா்.