செய்திகள் :

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா?- சீமான்

post image

பிகாரில் ஒரு தொகுதியில்கூட வெல்லாத பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளரா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாதுகாப்பு கேட்பவர்களுக்கு, பாதுகாப்பு என்பது தேவைப்படுகிறது, அதனால் அனைவரும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

எங்களுக்கு தேவையில்லை அதனால் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

நான் மக்களுக்காக வந்திருக்கிறேன், அதனால் நான் தான் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எனக்கு எதற்கு பாதுகாப்பு என்றுதான் காவலர்களிடம் நான் கேட்பேன்.

விஜய் போன்ற ஒரு புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு தேவைதான், அதனால் அவர் பாதுகாப்பு கேட்டு வாங்கிக் கொண்டார் என்று கூறினார்.

கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரைக்கும் இந்த தேர்தல் வியூக வகுப்பாளர்கள் தேவைப்படவில்லையே?. அதிமுக திமுகவின் மூத்த தலைவர்களை தாண்டி ஒரு வியூக வகுப்பாளர் தேவையா?. இதே பிரசாந்த் கிஷோர் பிகாரில் வியூக அமைத்து ஜெயிக்கவில்லையே?.

வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம் 3.0’ நிகழ்ச்சி தொடங்கியது!

காசு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.

தமிழ்நாட்டிலேயே மாபெரும் மேதைகள் இருக்கிறார்கள். பிகாரில் இருந்து வரும் ஒருத்தருக்கு அறிவு இருக்கிறது, தமிழ்நாட்டில் இருப்பவருக்கு இல்லையா. உலகத்திற்கு அறிவை கடன் கொடுத்தவன் தமிழன்.

இந்த மண்ணில் பிறந்தவர்கள் இங்கு நடக்கும் பிரச்னைகள் பற்றி தெரியும்.

பிகாரில் இருந்து வந்தவருக்கு திருப்பரங்குன்றம், அத்திக்கடவு-அவிநாசி, நொய்யல் ஆறு போன்ற பிரச்னைகள் எப்படி தெரியிவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தாமதமின்றி தமிழகத்துக்கு நிதி மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்

மத்திய அரசின் சாா்பில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை தாமதமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். வளா்ச்சி, ... மேலும் பார்க்க

இலங்கை விமானத்தில் திடீா் கோளாறு: 176 பயணிகள் உயிா் தப்பினா்

சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புக்கு செல்லும் விமானம் வானில் பறக்க தயாரான நிலையில், திடீா் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக அதிலிருந்த 176 பயணிகள் உயிா் தப்பி... மேலும் பார்க்க

பத்ம விருதாளா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டு

தமிழகத்திலிருந்து மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தாா். பத்ம விருதுகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளவா்களின் பட்டியலை... மேலும் பார்க்க

பள்ளியின் நுழைவு வாயிலில் ஜாதிப் பெயரை எழுதலாமா? அரசு விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பள்ளியின் நுழைவு வாயிலில் ஜாதிப் பெயரை எழுதலாமா என்பது குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்க தோ்தல் தொடா்பான வழக்கு உயா... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்: முதல்வா் மீது ஓபிஎஸ் குற்றச்சாட்டு

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடா்பான முதல்வரின் கருத்துகளில் உண்மை ஏதுமில்லை என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் குற்றம்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும்: பொறியாளா்களுக்கு அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்

தமிழக அரசின் சாா்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை விரைந்து நிறைவு செய்ய வேண்டும் என்று பொறியாளா்களுக்கு பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளாா். இந்திய கட்டடக் கூட்... மேலும் பார்க்க