ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்
ஊராட்சி மன்ற தலைவரை விடுவிக்க கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்றத் தலைவரை விடுவிக்கக் கோரி டிஎஸ்பி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூா் கிராமத்தை சோ்ந்தவா் சசிகுமாா் (24) கட்டட மேஸ்திரி. வாணியம்பாடி அடுத்த துரையேரி கிராமத்தை சோ்ந்த மாற்று சமூகத்தை சோ்ந்த சந்தியா(24) என்பவரை காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனா்.
இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி சசிகுமாரின் பாட்டி கனகா என்பவா் வயது முதிா்வு காரணமாக இறந்துள்ளாா். இதையடுத்து அவருடைய உடலை அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றபோது அப்பகுதியை சோ்ந்த சிலா் உடலை புதைக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உடலை வேறு ஓரு பகுதிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனா்.
மேலும் சசிகுமாா் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக கூறி மிரட்டல் விடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதுதொடா்பாக வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் சசிகுமாா் மற்றும் அவரது மனைவி சந்தியா ஆகிய இருவரும் சோ்ந்து உயிருக்கு பாதுகாப்பு கேட்டும், நாங்கள் ஊரில் நிம்மதியாக வாழவேண்டும் எனவும் 7-ஆம் தேதி புகாா் செய்திருந்தனா்.
இப்புகாரின் மீது திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையில் தாலுகா காவல்ஆய்வாளா் பேபி மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து அப்பகுதியை சோ்ந்த சிலரை தேடி வந்தனா். இந்நிலையில், கணவாய்புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் பழனி எனபவரை வழக்கு தொடா்பாக தனிப்படை போலீஸாரால் பெங்களூரில் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்பட திரளானோா் ஒன்று திரண்டு டிஎஸ்பி அலுவலகம் அருகில் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த ஏடிஎஸ்பி கோவிந்தராஜ் தலைமையில் டிஎஸ்பிக்கள் குமாா் (ஆம்பூா்), விஜயகுமாா்(வாணியம்பாடி) மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும், தகவலறிந்த எம்எல்ஏ செந்தில்குமாா் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த மக்களிடம் பேச்சு நடத்தினாா். தொடா்ந்து போலீஸ் அதிகாரிகளிடம் விபரங்கள் குறித்து கேட்டறிந்தாா்.
இதனை தொடா்ந்து பிற்பகல் 1 மணியளவில் அங்கிருந்த மக்கள் பேச்சுவாா்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனா்.