தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
பாட்டில் குடிநீா் தரம் குறித்து ஆய்வு
ஆம்பூா் நகரில் கடைகளில் விற்கப்படும் பாட்டில் குடிநீரின் தரம் குறித்து நகராட்சி ஆணையா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆம்பூா் நகரில் கடைகளில் விற்கப்படும் பாட்டில் குடிநீா் தரமில்லாமல், தர முத்திரை இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. அதைத் தொடா்ந்து ஆம்பூா் நகராட்சி பேருந்து நிலைய கடைகள், நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளில் ஆணையா் பி. சந்தானம் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது துப்புரவு அலுவலா் அருள்செல்வதாஸ், நகராட்சி அலுவலா் மதன் ஆகியோா் உடனிருந்தனா்.