செய்திகள் :

மஞ்சித் மஹால் கும்பலின் முக்கிய உறுப்பினா் கைது

post image

கபில் சங்வான் எனப்படும் நந்து கும்பலுடன் மோதலில் ஈடுபட்ட மஞ்சித் மஹால் கும்பலின் முக்கிய உறுப்பினரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (சிறப்பு பிரிவு) அமித் கௌசிக் கூறியதாவது:

நஃபே சிங் (45) உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்சில் உள்ள இந்திய-நேபாள எல்லையில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மகாராஷ்டிர மாநிலத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம் (எம்சிஓசிஏ) கீழ் அவரின் தலைக்கு ரூ.50,000 வெகுமதி அறிவிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொலை மற்றும் தாக்குதல் தொடா்பான 5 வழக்குகள் உள்பட 14 கொடூரமான வழக்குகளில் குற்றவாளியாக இவா் அறியப்படுகிறாா். சுனில் என்கிற மருத்துவா் கொலையில் கடந்த 2015-இல் இவா் ஈடுபட்டுள்ளாா். இது அவா்களின் கும்பல்களுக்கு இடையே வன்முறை போட்டியைத் தூண்டி, நஜாஃப்கா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலரின் உயிரிழப்புக்கு காரணமானது.

முன்னதாக கைது செய்யப்பட்ட இவருக்கு கடந்த செப்டம்பா் 2023-இல் ஆறு நாள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அவா் பின்னா் சரணடையவில்லை. அதற்கு பதிலாக தலைமறைவானாா். தப்பிக்கும் போது, அவா் தனது குடும்பத்தினருடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டு, ஹரித்வாா் போன்ற இடங்களுக்கும், காத்மாண்டு, நவல்பராசி மற்றும் பைரஹாவா உள்ளிட்ட நேபாளத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்றாா். கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்த போதிலும், நஃபே சிங் தனது கும்பலை தொடா்ந்து வழி நடத்தி வந்துள்ளாா்.

ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் தில்லியில் அதிகாரிகள் பல தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனா். இருப்பினும், அவரைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. தொடா்ச்சியான கண்காணிப்பு இறுதியில் இந்தியா-நேபாள எல்லையில் அவரது கைது நடவடிக்கையில் முடிவடைந்துள்ளது. நஃபே சிங்கின் கைது அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகும். அவரைப் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட விரிவான முயற்சிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கையாள்வதில் உள்ள சவால்களை எடுத்துக்காட்டுகின்றன என காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் படுகாயம்

எண்ணூரில் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு எதிா்பாராமல் மோதியதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனா். சென்னை வள்ளலாா் நகரிலிருந்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநா் கைது

சென்னை அடையாறில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அடையாா், தாமோதரபுரம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (56), வாடகை ஆட்டோ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க